Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 13, 2015

    "இ-பே ரோல்' முறையிலுள்ள இடர்பாடுகளை களைய வேண்டும்


    அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் "இ-பே ரோல்' முறையை சீரமைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வலியுறுத்தினர்.


    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாநிலக் கருவூலத் துறை ஊதிய விவரங்களை இ-பே ரோல் சிஸ்டம் (ங்-ல்ஹஹ் ழ்ர்ப்ப் ள்ஹ்ள்ற்ங்ம்) என்ற இணையதளத்தில் நேரடியாக பதிவேற்றம் செய்வதை அறிமுகப்படுத்தியது.

    தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு


    இ-பே ரோல் மூலம் ஊதியம் வழங்கப்பட்டது. இதனால், மார்ச் மாத ஊதியம் தாமதமாக ஏப்ரல் 11-ஆம் தேதிதான் வழங்கப்பட்டது.

    பி.எப்., கடன், சிறப்பு சேமநல நிதி, மருத்துவக் காப்பீடு, பங்களிப்பு ஓய்வூதியத் தொகை, கோ-ஆப்டெக்ஸ் ஆகிய அரசுப் பிடித்தங்கள் அனைத்தும் இந்த முறையில் வழக்கம்போல பிடித்தம் செய்யப்படுகிறது.

    ஆனால், உள்ளூர் பிடித்தங்களான அஞ்சலக தொடர் இட்டு வைப்புத் தொகை, காப்பீட்டுத் தொகை, கூட்டுறவுச் சங்கப் பிடித்தங்களை முன்பு சம்பளம் வழங்கும் அலுவலர்கள் பிடித்தம் செய்து மொத்தமாக காசோலைகளாக அந்தந்த நிறுவனங்களுக்கு வழங்கி வந்தனர்.

    ஆனால், இ- பே ரோல் சிஸ்டம் என்ற இணையதளத்தில் உள்ளூர் பிடித்தங்களை நேரடியாக செலுத்த வழிவகை செய்யப்படவில்லை.

    இதனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அஞ்சலகம், காப்பீட்டு அலுவலகம், கூட்டுறவுச் சங்க அலுவலகங்களில் பணத்தை நேரடியாக செலுத்தி ரசீதுகளை தங்களது துறை அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆசிரியர்கள்கூறியது:

    உள்ளூர் பிடித்தங்களையும்

    இ- பே ரோல் மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட வேண்டும். மாநிலம் முழுவதும்

    இ-பே ரோல் இணையதளத்தை அனைவரும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது ஏற்படும் தாமதம், கணினி இடர்பாடுகளை நீக்கிட அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தியோ, விரைவுபடுத்தியோ மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    No comments: