Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, April 17, 2015

    புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று: அமைச்சர்கள் வாழ்த்து

    புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மாநிலத்திலேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. 9001:2008 தரச்சான்று பெற்றுள்ளதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன் ஆகியோர் கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு நலத் திட்டங்களை கொண்டு சேர்ப்பது, கண்காணிப்பது ஆகியவற்றில் இணையதள வசதியை அறிமுகப்படுத்தி அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும், "புதுகை சிலெட்' என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் குறித்த விவரங்களை இணையதளம் மூலம் உடனுக்குடன் பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    நிகழாண்டில், பள்ளிகளில் பயின்று மாற்றுச்சான்றிதழ் கோரும் மாணவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகளில் புகைப்படத்துடன் கூடிய மாற்றுச்சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, அரசு நலத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தலில் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித் துறையை முதன்மையான இடத்துக்கு கொண்டு செல்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அங்கீகரிக்கும் விதமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் செயல்பாடுகளைப் பாராட்டி ஐ.எஸ்.ஓ 9001:2008 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே முதலாவதாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் இந்தத் தரச்சான்றை பெற்ற அலுவலகம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
    இதுகுறித்து தகவலறிந்த தமிழக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா. அருள்முருகன் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    No comments: