Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, April 4, 2015

    மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை கற்பிக்கவேண்டும்; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிறுவனம் சுற்றறிக்கை

    சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புகலைகளை கற்பிக்கவேண்டும் என்றும் பள்ளிக்கூடங்களில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தவேண்டும் என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நிறுவனம் இந்தியாவில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. நிர்வாகங்களுக்கும், பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    பாதுகாப்பான சூழ்நிலை
    அனைத்து குழந்தைகளுக்கும் படிப்பதற்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்று உரிமை உள்ளது. அவர்கள் அனைத்து துறையிலும் வளர்ச்சி அடையவேண்டும். பள்ளிக்கூடங்களில் ஆண், பெண் சமம் என்ற நிலையை உருவாக்கவேண்டும். ஈவ்டீசிங், பாலியல் கொடுமை ஆகியவற்றில் இருந்து குழந்தைகளைபாதுகாக்கவேண்டும். இந்த விழிப்புணர்வை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தவேண்டும்.குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வை பள்ளிக்கூட நிர்வாகிகளும், அனைத்துஆசிரியர்களும், பள்ளிக்கூட ஊழியர்களும் அறியவேண்டும். பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் படிப்பதற்கு நல்ல சூழ்நிலையை பள்ளி நிர்வாகம் உருவாக்கவேண்டும்.வளர் பருவத்தில் உள்ள மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி பயிற்சி அளிக்கவேண்டும்
    மாணவிகளுக்கு கராத்தே
    மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்பிக்கவேண்டும். மேலும் ஆண்-பெண் சமம் என்பது குறித்த கண்காட்சி, வினா-விடை போட்டியை பள்ளிகளில் நடத்தவேண்டும். விடுதிகளில் மன ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவேண்டும். அவர்கள் மீது தனிப்பட்ட அக்கறை செலுத்தி அவர்களுக்கு உரிய சவால்களை சந்திக்கும் திறனை உருவாக்கவேண்டும்.மாணவ-மாணவிகளுக்கு மேற்கண்டவாறு பிரச்சினை ஏற்பட்டால் புகார் செய்வதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் கமிட்டி அமைக்கப்படவேண்டும். அந்த கமிட்டியில் பள்ளியின் முதல்வர் அல்லது துணை முதல்வர், ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர், ஒரு மாணவி, ஒரு மாணவர், ஒரு ஆசிரியர் அல்லாத ஊழியர் ஆகியோர் இடம் பெறவேண்டும். அந்த கமிட்டியிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    புகார் பெட்டி- சி.சி.டி.வி. கேமரா
    மேலும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் புகார் செய்ய, புகார் பெட்டி இருக்கவேண்டும். அந்த பெட்டியில் பாலியல் கொடுமை பற்றி மாணவ-மாணவிகள் ஏதாவதுஎழுத்துப்பூர்வமாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பள்ளிக்கூட வளாகங்களில் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படவேண்டும். மாணவர்களை உளவியல் ரீதியாக கவனிக்கவேண்டும். அவர்கள் ஆர்வம் இல்லாமல் இருப்பது, மன அழுத்ததில் இருந்தால் அவர்களுக்கு முறையான உளவியல் ரீதியான கலந்தாய்வு அளிக்கவேண்டும். மேற்கண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வகுப்பறைகளிலும், விடுதிகளிலும், விளையாடும் இடங்களிலும் இருக்கவேண்டும்.
    குழந்தைகளுக்கானஹெல்ப் லைன்
    குழந்தைகளுக்கான ஹெல்ப் லைன் போன் நம்பர் நோட்டீசு போர்டு உள்பட முக்கிய இடங்களில் எழுதி போடவேண்டும். குறிப்பாக 1098 என்ற நம்பர் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தெரியவேண்டும். பள்ளிக்கூட நிர்வாகம், ஊழியர்கள் மாணவ-மாணவிகளுக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    No comments: