''சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தால் பாதிப்பு இல்லை,'' என, அமைச்சர் வளர்மதி தெரிவித்தார். மதுரையில் சத்துணவு மையங்களை ஆய்வு செய்த பின், அவர் கூறியதாவது: சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக ஏற்கனவே பேச்சு நடத்தப்பட்டது. இதில், 12 கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன.
இதற்கிடையில், ஊழியர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்திலுள்ள அனைத்து மையங்களிலும் குழந்தைகளுக்கு வழக்கம் போல சத்துணவு வழங்கப்பட்டது. பணிக்கு வராத ஊழியர்கள் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை பெறப்பட்டு, பின் முடிவு செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment