Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, April 8, 2015

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்தது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களில் விலைவாசி நிலவரத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 107 சதவீத அகவிலைப்படியை 113 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

    ஆறாவது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசில் பணியாற்றும் 48 லட்சம் ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர்.

    மதுரை-ராமநாதபுரம் நான்கு வழிப்பாதை: மத்திய அமைச்சரவையைத் தொடர்ந்து நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசி முதல் சுல்தான்பூர் இடையிலான 200 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 56-ஐ ரூ.4,400 கோடியில் நான்கு வழி நெடுஞ்சாலையாக மாற்றவும், மதுரை-ராமநாதபுரம் இடையிலான 115 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 49-ஐ ரூ.1,400 கோடியில் நான்கு வழிப்பாதையாக மாற்றவும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

    தமிழகத்தின் தென் பகுதிகளை மதுரையுடன் இணைக்கும் இந்த நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

    No comments: