தமிழ்நாட்டில் 570–க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2 லட்சம் பி.இ., பி.டெக் இடங்களை நிரப்ப ஒற்றைசாளர முறையில் பொது கலந்தாய்வு நடத்தப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் இந்த கவுன்சிலிங் நடைபெறும்.இந்த வருடம் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளில் அண்ணா பல்கலை கழக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்களை அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. வழக்கமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையே இந்த வருடமும் பின்பற்றப்படுகிறது.பிளஸ்–2 தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் பி.இ. சேர விரும்பும் மாணவர்கள் எந்த பாடம் பிரிவை தேர்வு செய்யலாம். எதற்கு வேலை வாய்ப்பு அதிகம் என்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கட்–ஆப் மதிப்பெண் எவ்வளவு கிடைக்கும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.மே முதல் வாரத்தில் தேர்வு முடிவு வெளியாகும் என்பதால் அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக என்ஜினீயரிங் விண்ணப்பங்களை வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளனர். விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் முக்கிய ஊர்களிலும் விற்கப்படும்.
No comments:
Post a Comment