Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, April 4, 2015

    பிளஸ் 2 உயிரியல் தேர்வு: கருணை மதிப்பெண் இல்லை

    பிளஸ் 2 தேர்வுகளிலேயே மிகக் கடினமான உயிரியல் பாடத் தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை அரசுத் தேர்வுகள் இயக்ககமும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

    பிளஸ் 2 உயிரியல் பாடத் தேர்வில் விலங்கியல் பிரிவு மிகக் கடினமாக இருந்தது. பொதுத்தேர்வுகளில் இதுவரை கேட்கப்படாத கேள்விகள் இடம் பெற்றிருந்ததோடு, போட்டித் தேர்வு அளவுக்கு வினாக்கள் கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.
    இந்த நிலையில், உயிரியல் பாடத்தில் விலங்கியல் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் பாடப்புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. வினாக்களில் எந்தப் பிழைகளும் இல்லை என்பதால் கருணை மதிப்பெண் வழங்கத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
    உயிரியல் பாடத்தில் தேர்ச்சி பெற விலங்கியல், தாவரவியல் பிரிவுகளையும் சேர்த்து 30 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது. செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற 40 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதால் பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    விலங்கியல் பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகளும் தரமானவைதான். ஆனால், எம்.பி.பி.எஸ். அல்லது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளைப் போன்று, தசைச் சிதைவு நோய்க்கான காரணங்கள், நாடித் துடிப்பு குறைவதற்கான காரணங்கள் போன்ற கடினமான கேள்விகள் இதில் இடம்பெற்றிருந்தன. புத்தகம் முழுவதும் படித்த மாணவர்கள் கூட விலங்கியல் பிரிவில் 75-க்கு 50 அல்லது 60 மதிப்பெண் மட்டுமே பெற முடியும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
    விலங்கியல் பிரிவில் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாதிரி வினாப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டன. ஆனால், இந்த வினாத்தாள்களிலிருந்து 5 மதிப்பெண் அளவுக்கே கேள்விகள் பொதுத்தேர்வில் வந்துள்ளன. எனவே, விடைத்தாள் திருத்துவதில் சற்றுத் தாராளமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
    உயிரியல் பாடத்தில் விலங்கியல் பிரிவு கடினமாக இருந்தாலும், தாவரவியல் பகுதி வினாக்கள் எளிமையாக இருந்தன.

    No comments: