Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 6, 2015

    பிரிட்டனில் இனி தந்தையும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை எடுக்கலாம்: அரசின் முடிவால் மகிழ்ச்சி பெருக்கில் ஆண்கள்


    உலகம் முழுவதும் அரசாங்கங்கள் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்று. இந்த விடுமுறையில் பிரிட்டன் நாடு ஒரு முன்மாதிரி முடிவை எடுத்துள்ளது.


    அந்நாட்டில் இனி குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது போல, தந்தைக்கும் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்முடிவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்நாட்டில் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு 50 வார விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் இந்த விடுமுறையை கணவன், மனைவி இருவரும் சமமாக பிரித்துக்கொள்ளலாம்.

    அதாவது கணவன் 25 வாரமும், மனைவி 25 வாரமும் விடுமுறையை பிரித்துக்கொண்டு தங்கள் அன்பான குழந்தையை இருவரும் பராமரிக்கலாம். குழந்தையை தத்தெடுப்பவர்களும் இந்த 50 வார விடுமுறையை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் வெற்றிகரமாக வேலையை தொடர்வதா அல்லது குழந்தை பெற்றுக்கொள்வதா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவது அரசின் இம்முடிவால் தவிர்க்கப்பட்டுள்ளதுடன், தாயின் வேலை பறிபோவதை தடுக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    முன்னதாக குழந்தையை பெற்றெடுத்த காரணத்திற்காக தாயை வேலை விட்டு நீக்குவது சட்டவிரோதம் என பிரிட்டன் சட்டம் இயற்றியிருந்தது. 

    எனினும் பழைய நடைமுறைகளை மாற்றிக்கொள்வதில் தவறில்லை என்று தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, எப்போதும் குழந்தைகளை வீட்டில் தாய் மட்டுமே கவனித்துக்கொண்டு வரும் நிலையில், ஆண்களும் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ள விருப்பப்படுகின்றனர். ஆகையால் அரசு எடுத்துள்ள இம்முடிவு இருவருக்கும் மகிழ்ச்சியை தரும் என்று அந்நாட்டு துணை பிரதமர் நிக் க்ளெக் கூறினார். அரசின் இம்முடிவால் ஆண்டுதோறும் 2,85,000 தம்பதியர்கள் பயனடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    No comments: