Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, April 9, 2015

    அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதி முடிவடைகிறது கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும்

    அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 177 தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து750 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. 5 ஆயிரத்து 602 உயர்நிலைப்பள்ளிகளும், 6 ஆயிரத்து 299 மேல்நிலைப்பள்ளிகளும் இருக்கின்றன.
    இந்த பள்ளிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் வேலைபார்க்கிறார்கள். ஒரு கோடியே 40 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி தொடங்கியது. அந்த தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல் தேர்வுடன் முடிவடைகிறது. ஏற்கனவே பிளஸ்-1 தேர்வு நடந்து முடிந்துவிட்டது. 6-வது முதல் 8-வது வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு தேர்வு வருகிற 20-ந் தேதிமுடிவடைகிறது.

    ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன

    ஆனால் 22-ந் தேதி அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் முடிவடைகின்றன. 23-ந் தேதி முதல் மே 31-ந் தேதி முடிய கோடை விடுமுறையாகும். தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளுக்கு 30-ந் தேதி வரைபள்ளிக்கூடங்கள் செயல்பட உள்ளன. அந்த பள்ளிக்கூடங்களுக்கு மே மாதம் 1-ந் தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட உள்ளது.தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1-ந் தேதி திறக்கின்றன.

    இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

    1 comment:

    C.Sugumar said...

    மேற்படி செய்தியை கட்டுரையை மட்டும் நேரடியாக அச்சடிப்பதற்கு வசதி செய்ய வேண்டும்.தேவையானவற்றை மட்டும் அச்சு செய்து கொள்ள உதவியாய் இருக்கும். copy-paste செய்யும் போது தேவையாற்ற விசயங்களும் வந்து விடுகின்றன.