Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, January 18, 2013

    அடிப்படை வசதிக்கேட்டு மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். திருவெண்ணெய்நல்லூரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பழைய அரசு பெண்கள் பள்ளியில் கல்லூரி
    செயல்படுவதால் போதிய இடவசதியில்லாமல் அவதியடைகின்றனர். அடிப்படை வசதிகள், லேப்டாப் மற்றும் பஸ்வசதி கேட்டும், பேராசிரியர்களை நியமிக்கக் கோரியும் வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இயற்பியல் பாடப்பிரிவிற்கு ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து மாணவர்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் பயனில்லாததால் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து கல்லூரியின் முதல்வர் தங்கதுரை கூறுகையில், "மாணவர்களின் போராட்டங்கள் குறித்து அவ்வப்போது திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பஸ் வசதி கேட்டு கடந்த டிசம்பர் 17ம் தேதியும், லேப்டாப் வழங்க வேண்டி கடந்த 28ம் தேதியும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குமேல் நான் என்ன செய்ய முடியும். மாணவர்கள் புரியாமல் போராட்டம் நடத்துவது வேதனையளிக்கிறது" என்றார்.

    No comments: