Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 3, 2013

    கிளிகளில் திருக்குறள் வெளியிட்டு ஓவிய ஆசிரியர் சாதனை

    காரைக்குடியை சேர்ந்த ஓவிய ஆசிரியர் பார்த்திபன், கிளிகள் (பேப்பர்) மூலம், திறக்குறளின் 133 அதிகாரங்களை வெளியிட்டு, நூதனமுறையில் ஆங்கில புத்தாண்டை வரவேற்றுள்ளார்.
    பறவை, விலங்கினங்கள் தெய்வத்தின் அவதாரங்களாக உள்ளன. ஆனால், கிளி மட்டுமே, மீனாட்சி, ஆண்டாளின் கைகளில் வீற்றிருக்கின்றன. அந்த வகையில், பச்சை கிளிக்கு மகத்துவம் தரப்படுகிறது.

    அந்த வகையில், காரைக்குடியை சேர்ந்த ஓவிய ஆசிரியர் பார்த்திபன், தனது முயற்சியால், ஆங்கில புத்தாண்டு (2013) பசுமையான ஆண்டாக அமையவேண்டியும், புத்தாண்டை செந்தமிழால் வரவேற்கும் விதமாக, பச்சை கிளிகளை (பேப்பர்) தயாரித்து, ஒவ்வொரு கிளியிலும் ஒவ்வொரு அதிகாரம் வீதம், 1300 குறள்களை 133 கிளிகளில் எழுதி சாதித்துள்ளார்.

    இதில், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த கிளிகள்(குறள்) மீது அறத்துப்பால், மற்றொரு மரத்தில் இருக்கும் கிளிகளில் இன்பத்து பால், வேடம் அணிந்த குழந்தைகள் பறக்கவிடும் கிளியில், பொருட்பால்களிலான குறள்களை எழுதியுள்ளார். இவர், ஏற்கனவே 10 நிமிடத்தில் திருக்குறளை எழுதிய சாதனை, ஒரு செ.மீ., நீளம், 0.5 செ.மீ., அகலமுடைய ஓவிய புத்தகம் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். தொடர் சாதனையில், இவர் தற்போது, கிளிகளில் திறக்குறளை எழுதி சாதித்துள்ளார்.

    ஓவிய ஆசிரியர் பார்த்திபன் கூறுகையில், "இறைவனுக்கு தூது அனுப்பப்படும் கிளிகள், இன்று இயற்கை சூழலோடு அமைந்த மரங்களுக்கு தூது விடுகின்றன. இச்சாதனை முயற்சியான பேப்பர் கிளிகளில், திறக்குறள் எழுதும் பணியில் 6 மாதம் ஈடுபட்டுள்ளேன்,'' என்றார்.

    No comments: