Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, January 15, 2013

    தேர்வுவாரியம் மூலம் தேர்வான 20,000 ஆசிரியர்களின் பெயர்நீக்கம்

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 20 ஆயிரம் பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. இதற்கான பட்டியலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம்
    விரைவில் அனுப்ப உள்ளது.  அரசு பணிகளுக்கு அல்லது ஆசிரியர் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோரின் பட்டியல் மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கு அனுப்பப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள பதிவு மூப்பு பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் பதவிக்கு தேர்வாவோரின் பட்டியல் மாநில, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன.  அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேரவு மூலமாக ஏறத்தாழ 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும், 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணையினை வழங்கினார். பணி நியமன ஆணை பெற்ற பெரும்பாலானோர் பணியில் சேர்ந்து விட்டனர்.  இந்த நிலையில் மேற்கண்ட 20 ஆயிரம் ஆசிரியர்களின் பெயர்களை பதிவு மூப்பு பட்டியலில் இருந்து நீக்குவதற்காக அதற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம், வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. பெயர் நீக்க பட்டியல் கிடைக்கப் பெற்றதும் சம்பந்தப்பட்ட மாநில வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படும். முதுநிலை பட்டாதாரியாக இருந்து பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்தவராக இருந்தால் அவர்களின் துறை தலைவரிடம் இருந்து தடையின்மை சான்று பெற்று முதுநிலை கல்வி தகுதிக்கான பதிவு மூப்பை தக்கவைத்துக் கொள்ளலாம். இதற்கிடையே புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையை வாங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    No comments: