Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 18, 2012

    பேராசிரியராக பதவியிறக்கம் செய்யப்பட்ட கல்லூரி முதல்வர்

    அரசு பி.எட்., கல்லூரியில், மாணவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான முதல்வர், அதே கல்லூரியில், பேராசிரியராக பதவியிறக்கம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை அரசு பி.எட்., கல்லூரியில், முதல்வர் பணியிடம் காலியானதைத் தொடர்ந்து, அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, அன்புச்செழியன் என்பவர், கல்லூரி முதல்வராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.
    அவர் மீது, பெற்றோர் - ஆசிரியர் கழகம் என்ற பெயரில், மாணவர்களிடமிருந்து வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும், மாணவியரை, நயன்தாரா, அமலாபால் என, நடிகைகளின் பெயரை குறிப்பிட்டு அழைப்பதாகவும், தனியார் பி.எட்., கல்லூரி நிர்வாகத்தினரை மிரட்டி வசூல் வேட்டை நடத்துவதாகவும், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இவரது நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகத்தினர், கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், திடீர் ஆய்வு மேற்கொண்ட, திருச்சி மண்டல பி.எட்., கல்லூரிகளின் இணை இயக்குனர் வீரமணி, முதல்வர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மாணவர், ஆசிரியர் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் தனித்தனியோ விசாரணை நடத்தினார்.

    அதேபோன்று, தனியார் பி.எட்., கல்லூரி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில், முதல்வர் அன்புச்செழியன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.
    இதையடுத்து, புதுக்கோட்டை அரசு பி.எட்., கல்லூரி முதல்வர் அன்புச்செழியன் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை மீண்டும், அதே கல்லூரியில் பேராசிரியராக பதவியிறக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

    புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரி முதல்வர் சிவ கார்த்திகேயன், அரசு பி.எட்., கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கல்வித்துறையின் விதிமுறைகளை மீறி, முன்னாள் முதல்வர் அன்புச்செழியன் வசூல் செய்த கட்டணத்தை திருப்பித்தர வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு புதிய முதல்வர் சிவ கார்த்திகேயன் நடவடிக்கை எடுப்பார் என, மாணவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    No comments: