Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, October 6, 2012

    இரட்டைக் கல்வி முறையை ஒழிக்க வேண்டும்

    நம் நாட்டில் ஏழை, பணக்காரர் வித்தியாசம் காட்டும் இரட்டைக் கல்வி முறையை ஒழிக்க வேண்டும் என கல்வி குழு துணைத் தலைவரும், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அகில இந்திய பொதுச் செயலருமான ஈஸ்வரன் தெரிவித்தார்.
    அவர் கூறியதாவது : நாடு முழுவதும் கல்விக் கொள்கையில் பல வித்தியாசங்கள் உள்ளன. இரட்டை நிலை கல்வியை ஒழித்து, பொது நிலை கல்வி தேவை. அதன் மூலம் தகுதி வாய்ந்த மாணவர்கள், வாழ்க்கையில் வளம் பெறலாம். குறைந்த மதிப்பெண் எடுக்கும் பணக்கார மாணவர்கள், மருத்துவம் படிக்கலாம்; அதிக மதிப்பெண் எடுத்த ஏழை மாணவர்களால், அதிக பணம் செலவு செய்து மருத்துவம் படிக்க முடியாத நிலை உள்ளது.

    தனியார் கல்வி நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில், கட்டடங்களை வழங்கி, அதில், 25 ஏழை மாணவர்களுக்கு இடமளிக்க வலியுறுத்தும் மத்திய அரசின் முடிவு நியாயமற்றது.

    மாறாக, அரசுப் பள்ளிகளை, தனியாருக்கு இணையாகக் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிகரான சம்பளம் இல்லை; இதில், 7,000 ரூபாய் வித்தியாசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: