கிராம சுகாதார செவிலியர்கள் பணி நியமனத்திற்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, நாளை துவங்குகிறது. சென்னை, தேனாம்பேட்டை, மருத்துவ பணிகள் தேர்வு வாரிய அலுவலகத்தில் வரும் 18ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள, 543 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள், மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்காக, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலான, 1,482 பேரின் பெயர் பட்டியல், சுகாதாரத் துறை இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் பெறலாம்.அரசு மருத்துவமனைகளில், "ரேடியோ கிராபர்&' பணியிடங்களுக்கு, மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் மூலம், கடந்த ஜூலையில் நடந்த பணி நியமனத்தை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment