Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 4, 2012

    10ம் வகுப்பு தேர்ச்சி அதிகரிக்க தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை

    மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளிலும் நடைபெற இருக்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு அதிகரிக்கவும் மாணவர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் உயர் மதிப்பெண்கள் பெறவும் உதவிடும் வகையில் கீழ்க்காணும் அறிவுரைகள் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன.

    • 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு தேர்விலும் பெறும் பாடவாரியான மதிப்பெண்கள் எப்போதும் தலைமையாசிரியர் பார்வையில் இருக்க வேண்டும்.
    • குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்ந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் என்ற வகையில் மாணவர் பட்டியல் தனித்தனியே ஒவ்வொரு தேர்வுக்கும் தயாரிக்கப்பட வேண்டும்.
    • மூன்று வகையான மாணவர்களுக்கும் தனித்தனி கவனம் செலுத்தப்பட வேண்டும்.
    • மாணவர்களுக்கு அந்தந்த பாடங்களில் அலகு தேர்வுகள் (Unite Tests) நடத்தப்பட்டு உடனடியான திருத்தப்பட்டு மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட வேண்டும்.
    • தேர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு மாலையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
    • ஒவ்வொரு தேர்விலும் ஒவ்வொரு பாடத்திலும் உயர்ந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு வழிபாட்டுக் கூட்டத்தின் போது சிறுசிறு பரிசுகள் வழங்கலாம்.
    • எந்த பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வி அடைகிறார்களோ சிறப்பு கவனம் எடுத்து சொல்லித்தர வேண்டும்.
    • மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த, Blue Print -ன் படி எனிமையாக, அதிக மதிப்பெண் பெறும் பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தி, பயிற்சியளிக்கலாம்.
    இவ்வாறு மாணவர்களை ஊக்கப்படுத்தலாம் என்று தலைமையாசிரியர்களுக்கு மாநிலத் திட்ட இயக்குநர் ஆலோசனைகள் வழங்கினார்.

    No comments: