Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, June 18, 2012

    ராகிங் தடுக்க அனைத்து கல்லூரிகளிலும் புகார் பெட்டி: தமிழக அரசு உத்தரவு

    தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து கல்லூரிகளிலும், ராகிங்கை தடுக்கும் வகையில், புகார் பெட்டி அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு உயர்கல்வித் துறை அமைப்புக்கும், தமிழக டி.ஜி.பி., தனிப்பட்ட முறையில், நடவடிக்கை எடுக்கக்கோரி, கடிதம் அனுப்பியுள்ளார்.
    நடப்பு கல்வியாண்டில், கல்லூரிகள் திறக்க உள்ள நிலையில், அனைத்து கல்லூரிகளிலும், ராகிங்கை தடுக்க, புகார் பெட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

    அதன்படி, கல்லூரிகளில் எக்காரணம் கொண்டும், ராகிங், கேலி, கிண்டல் உள்ளிட்ட எவ்வித செயல்பாடுகளாலும், மாணவ, மாணவியர் பாதிக்கப்படக் கூடாது. இதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் முதல்வரின் அறை முன், புகார் பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும்.
    கல்லூரி முதல்வர் தலைமையில், ராகிங் தடுப்பு நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்து, இப்புகார் பெட்டியில் மாணவ, மாணவியர் ரகசியமாக சேர்க்கும் கடிதங்களின் மீது, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் போலீசாரின் உதவியையும் முதல்வர் கேட்டுப் பெறலாம்.
    மேலும், பேராசிரியர் தலைமையிலான, கண்காணிப்புக் குழு அமைத்து, கல்லூரியில், ராகிங் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ராகிங் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மாணவ, மாணவியர் மீது, போலீஸ் புகார் அளிக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    இதுகுறித்து கல்லூரி ஆசிரியர்கள் கூறுகையில், புகார் பெட்டியை முறையாக பராமரிக்காமல் இருக்கும் முதல்வர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித் துறை எச்சரிக்கை செய்துள்ளதால், அனைத்து கல்லூரிகளிலும் இத்திட்டம் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது.
    இது முதலாமாண்டு மாணவ, மாணவியர் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களுக்கு தயக்கத்தை உடைத்து, துணிவையும் இப்புகார் பெட்டிகள் வழங்கியுள்ளது என்றனர்.

    No comments: