Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 14, 2012

    அரசு கலை கல்லூரிகளில் 18ம் தேதி முதல் கவுன்சலிங்

    அரசு கலை கல்லூரிகளில், பட்டப் படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம் முடிந்துள்ள நிலையில், வரும் 18ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
    சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில், 14ம் தேதி மாணவர் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. 18ம் தேதி கணிதம், வேதியியல் பாடத்திற்கும், அடுத்த நாள் கணிப்பொறி படிப்பிற்கும், 20ம் தேதி பி.காம்., படிப்பிற்கும், 21ம் தேதி மற்ற அறிவியல் படிப்பிற்குமான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    பிராட்வே பாரதி பெண்கள் கல்லூரியில், 14ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. 18ம் தேதி, பி.காம்., படிப்பிற்கும், அடுத்த நாள் பொருளாதார பாடத்திற்கான, கவுன்சிலிங் நடைபெறுகிறது. 20ம் தேதி வரலாறு பாடத்திற்கும், 22ம் தேதி வேதியியல், உயிரியல் பாடத்திற்கும், 25ம் தேதி தாவரவியல், விலங்கியல், புவியியல் உள்ளிட்ட பாடத்திற்கான கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
    தியாகராஜ கல்லூரியில் இன்று (14ம் தேதி) தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. 19ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. 21ம் தேதி பி.காம்., பாடத்திற்கான கவுன்சிலிங் நடக்கிறது.
    ராணி மேரி கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி கூறுகையில், வரும் 18ம் தேதி கவுன்சிலிங் நடைபெற உள்ளதால், மாணவியரின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு, அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. தரவரிசைப் பட்டியலில் மாணவர்கள் தங்களுக்கு உரிய இடங்களை தெரிந்து கொள்ளலாம் என்றார்.

    No comments: