Pages

பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட காரணங்கள்

பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், தனித்துவ பாணியை கொண்டிருப்பதற்கு பல காரணிகள் உள்ளது. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இனபெருக்க ஹார்மோனை கூறலாம். பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக சமுதாய அழுத்தத்தையும் கூறலாம். இவ்வகை அழுத்தங்களைப் பற்றி உங்களால் விவரங்களை சேகரிக்க முடிந்தால், அதற்கான தீர்வுகளைப் பெறுவதும் சாத்தியமே!

பெண்கள் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க வழிகள்

பெண்கள் உடல் எடையினை எளிதாக குறைக்க முடியாது. எனினும், பெண்கள் இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கத்தை செயல்படுத்தி நீங்கள் விரைவில் உங்கள் எடையை குறைக்க உதவும்!
– தொடர்ந்து ஒரு குறைந்த கால‌ உணவு திட்டம் 
– பசிக்கும் போது மட்டும் உணவு. அதுவும் சரியான‌ இடைவெளியில் 
– நல்ல‌ உணவு பழக்கம் மற்றும் தேவையற்ற‌ உணவு பழக்கத்தில் இருந்து விலகி இருத்தல்

திருவள்ளுவரின் பிறந்தநாள் வடஇந்தியப் பள்ளிகளில் கொண்டாடப்படும்: மத்திய அரசு

உலகப் புகழ்பெற்ற தெய்வீக கவி திருவள்ளுவரின் பிறந்தநாள், அடுத்தாண்டு, வட இந்திய பள்ளிகளில் கொண்டாடப்படுவதோடு, அவருடைய போதனைகள், பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்று மத்திய மனிதவள அமைச்சர் இரானி தெரிவித்துள்ளார்.

சமஸ்கிருத மொழிப்பாட விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

அரசு செய்த தவறுக்கு மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? எனவே நடப்பு கல்வியாண்டில் மூன்றாவது மொழிப் பாடமாக ஜெர்மன் மொழியே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

Next 7th Pay Commission Meeting at Jodhpur from 12th to 15th December


7th Central Pay Commission is proposed to visit Jodhpur to meet the CG Employees Associations and Trade Union delegates from 12th to 15th December, 2014.

கல்வி, சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது

கல்வி, சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

விடுமுறை குறித்த விபரம் தெரியாமல் பள்ளிக்கு வந்து திரும்பிச் சென்ற மாணவர்கள்

கல்வித்துறையின் தெளிவான உத்தரவு இல்லாததால் நேற்று மாணவர்கள் பள்ளிக்கு வந்த பிறகு விடுமுறை என திருப்பி அனுப்பப்பட்டனர். நேற்று முன்தினம் இரவிலிருந்து நேற்று காலை வரை சிவகங்கை மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலான மழை பெய்தது . நேற்று ஒருநாள் மட்டும் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): சிவகங்கை - 30,காரைக்குடி - 24, திருப்பத்தூர் - 17.2,தேவகோட்டை - 27,மானாமதுரை - 27, திருப்புவனம் - 20.4,இளையான்குடி 32.சராசரி மழையளவு 25.3 மி.மீ.,இந்த தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதா, வேண்டாமா என பள்ளிகள் யோசித்தன.

உயர்கல்விக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தலைமையாசிரியர்களுக்கு கிடைக்குமா?

பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில் கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சம்பளம் வாங்க முடியாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

தேனி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சம்பள கணக்கு எண் வழங்காமல் அரசு உத்தரவு வழங்கப்பட்டதால், சம்பளம் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம்!

அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம் என, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் ஏன் திசைமாறுகின்றனர்?

சினிமா மற்றும் தொலைக்காட்சிகளால் மாணவர்கள் திசைமாறும் சூழல் நேர்கையில், கொலை போன்ற விபரீத சம்பவங்கள் நடக்கின்றன என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

துத்தநாக தாதுப்பொருளின் அளவு குறைந்தால் மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கும்: ஆய்வு

நரம்பு செல்களில் துத்தநாக தாதுப்பொருளின் அளவு குறைந்தால், மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கும் என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.

பள்ளியிலேயே சகமாணவனால் மாணவன் குத்திக்கொலை: அருப்புக்கோட்டையில் பயங்கரம்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் 8ஆம் வகுப்பு மாணவன் சகமாணவனால் பள்ளிக்கூடத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுவர் பிறந்த தினம் வரும் ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு

திருவள்ளுவர் பிறந்த தினம் வரும் ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் உத்திரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா எம்.பி. தருண் விஜயின் கோரிக்கையை ஏற்று மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி இதனை அறிவித்தார். இதற்கான அரசு ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

பிஎச்.டி. படிப்பு: திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முழு நேரம் மற்றும் பகுதி நேர பி.எச்டி. படிப்புகளை வழங்கி வருகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, வணிகவியல், கல்வியியல் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் பிஎச்டி படிக்கலாம்.

Friday, November 28, 2014

TET Posting Regarding: உயர் நீதிமன்றத்தின் முன் மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம் !!



        சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக் கோரி மதுரையில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
      உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எதிரே மாற்றுத் திறனாளிகள் இன்று காலை

EXPECTED DA CALCULATOR




The next index of CPI-IW for the month of November, 2014 will be released on 30th December 2014. The same will also be available on the office website www.labourbureau.gov. in.


Presently, the value of AICPIN for the month of October has been released. The value remains

வெளியே சுற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பள்ளி ஆசிரியர்கள் கவலை


வகுப்புகளை புறக்கணித்து, வெளியே சுற்றும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சென்னையில் இன்று அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டம்


சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தாக்கப்பட்டது தொடர்பாக அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு


அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரங்களை வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என லோக்பால் சட்டத்தின் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

"கடுமையாக உழைத்துதான் முன்னேறினேன்; அந்த காலத்தில் இரவு 2 மணி வரை படிப்பேன்"


நான் கடுமையாக உழைத்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். அந்த காலத்தில் இரவு 2:00 மணி வரை படிப்பேன். கல்லுாரிக்கு ஒழுங்காக போவேன் என்று தனது வாழ்க்கை அனுபவங்களின் வாயிலாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார் தினமலர் ஆசிரியர் டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி.

கணினி ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்த அரசின் பதில்

CM CELL PETITION- REG - COMPUTER TRS POSTING
Grievance :கணினி ஆசிரியர் பணியிடம் வேண்டுதல்
• 2012-2013 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2488. -(Source : Performance Statistical Information of School Education,Page.6) 2013-2014 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. 2014-2015 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.

நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக இன்று 28.11.2014 வெள்ளிக்கிழமை நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு

தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுமனைக் கடன் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்புத் தொகையானது, மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் கட்டுக்குள் மத்திய கல்வி வாரியப் பள்ளிகள்


தமிழக அரசின் கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள், அவர்களின் அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும், 30க்குள் கல்வி துறை அதிகாரிகளிடம் சமர்பிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ரூ.3,500 மாத ஊதியத்தில் பரிதவிக்கும்அரசு பள்ளி துப்புரவு பணியாளர்கள்


அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளாக பணி புரியும் 3,000 துப்புரவு பணியாளர்கள், ரூ. 3,500 ஊதியத்தில் குடும்பம் நடத்த முடியாமல் பரிதவிக்கின்றனர்.தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2012 நவ., 11 ல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் துப்புரவு பணியாளர் 3,000 பேர், இரவு காவலர் 2,000 பேர் நியமிக்கப்பட்டனர்.

ஆசிரியர்களுக்கான உயர்கல்வி அனுமதி

பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில் கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பின் எம்.பில்., பி.எச்டி., போன்ற உயர்கல்வி படித்தால் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும். இதனால் பலர் உயர்கல்வி படிக்க அனுமதி கோரி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்வர்.

'அரசு பள்ளி மாணவர்கள்யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை'

''நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதை, அரசு பள்ளி மாணவர்கள் உணர வேண்டும்,'' என, 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், எழுத்தாளர் ரமேஷ் பிரபா பேசினார்.'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் மாலை நிகழ்ச்சியில், எழுத்தாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது:

கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்குமதுரையில் நாளை பயிற்சி

தென் மாவட்டங்களைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரையில் நாளை பயிற்சி வகுப்பு நடக்கிறது.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 2015 மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது. 

Thursday, November 27, 2014

SSTA வின் மாபெரும் வெற்றி!!! பின்னேற்பு பெற இயக்குநர் நடவடிக்கை!!!

SSTA வின் மாபெரும் வெற்றி மற்றொரு  கோரிக்கை வென்றது!!! தொடக்கக் கல்வித்துறையில் முனனுமதி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் கோரும் அவர்கள் விபரம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை (மீண்டும் இதுபோன்று நடக்காது என்ற கடிதம் ) நகலை இயக்குநருக்கு அனுப்ப உத்தரவு

இன்று SSTA இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது?

இன்று SSTA  வழக்கு விசாரணைக்கு வரும் விபரம் வழக்கு எண் -4420/2014.                                           
                                HON'BLE  MR JUSTICE M.M.SUNDRESH
            TO BE HEARD ON THURSDAY THE 27TH DAY OF NOVEMBER 2014  AFTER MOTION LIST
-------------------------------------------------------------------------------------------------
  MONDAY AND TUESDAY : ADJOURNED ADMISSION CASES
  WEDNESDAY  : MISCELLANEOUS PETITIONS AND FINAL HEARING CASES
  THURSDAY AND FRIDAY : NOTICE REGARDING ADMISSION CASES
-------------------------------------------------------------------------------------------------

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள இணை இயக்குனர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

*மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக திரு. எம். பழனிசாமி அவர்களையும்,

*இடைநிலைக் கல்வி இணை இயக்குனராக திரு.கார்மேகம் அவர்களையும்,

வெளியே சுற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பள்ளி ஆசிரியர்கள் கவலை

வகுப்புகளை புறக்கணித்து, வெளியே சுற்றும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

"சாதாரண குடும்பத்தில் பிறந்த நம்மால், அது முடியுமா என்ற தாழ்வு மனப்பான்மை வேண்டாம்"

தினமலர் டி.வி.ஆர்., அகாடமி வழங்கிய, ஜெயித்துக் காட்டுவோம் காலை நிகழ்ச்சியில், கல்வி ஆலோசகர், ரமேஷ் பிரபா பேசியதாவது: மாணவர்களே, நீங்கள் (மாநகராட்சி பள்ளி மாணவர்கள்) யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. உங்களால் எல்லாம் முடியும். இந்த நிகழ்ச்சி, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஆனால், இங்கு தான், மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக ஒரு நாள் நிகழ்ச்சி நடக்கிறது;

தேசிய கல்விச் சான்றிதழ் சேமிப்பு மையத்தை உருவாக்க மும்பை பல்கலை திட்டம்

மும்பை பல்கலைக்கழகம், மாணவர்களின் ஆன்-லைன் கல்விச் சான்றிதழ்களை பாதுகாக்கும் வகையில், தேசிய கல்விச் சான்றிதழ் சேமிப்பு மையம் (என்.ஏ.டி.,) என்ற அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

"ஆசைக்கு அடிபட்டு, வாழ்க்கை இலக்கை இழந்து விடாதீர்கள்"

ஆசைக்கு அடிபட்டு, வாழ்க்கை இலக்கை இழந்து விடாதீர்கள் என, பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசினார். தினமலர் நாளிதழ் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: முதல் மதிப்பெண் எடுப்பது, வாழ்க்கையில் ஜெயிப்பது, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் என்ற கருத்தை நீங்கள் உடைக்க வேண்டும்.

இடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி!

நமது வாழ்க்கை முறையில், தொலைக்காட்சி என்பது தவிர்க்கவே முடியாத அம்சமாகி போனாலும், மாணவர்களின் படிப்பு என்று வரும்போது, அதிக பழிப்புக்கு ஆளாவது அந்த தொலைக்காட்சிதான்.

இன்றைய கல்வி வெறும் மதிப்பெண் வியாபாரம்: குமுறும் ஆசிரியர்


இன்றைய குழந்தைகளிடம் கலகலப்பு இல்லை. பாரதியார் "ஓடி விளையாடு பாப்பா" என்று சொன்னார். ஆனால், இன்றைய நகரங்களில் குடியிருப்புகள் எல்லாம் ஒரு சென்ட், இரண்டு சென்ட்களில் கட்டினால் விளையாடுவது எப்படி?

முதுநிலை ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதி என்ன? - அறிவிப்பு இல்லாததால் குழப்பம்

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, என்ன என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடாததால், விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், காலியாக உள்ள 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இம்மாதம் 7ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது குறைப்பு


அரியானாவில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ஆக குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 58-லிருந்து 60-ஆக உயர்த்தியிருந்தனர்.

7வது ஊதியக்குழு இடைக்கால அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யுமா?


Is Interim Relief Likely for Central Government Employees?

Is it really possible for Central Government employees to get an interim relief this time? Let us look at it in detail.

‘Interim Relief’ may be defined as the temporary relief given to employees before the new Pay Commission’s recommendations are implemented. ‘Interim relief will be treated sui generis’, most of the Finance Ministry orders included the sentence when sanctioning interim relief.

இப்படியும் ஓர் அரசுப் பள்ளி!


விருத்தாசலத்தை அடுத்த பெ.கா.வீரட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சித் தொடக்கப் பள்ளி தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்பட்டு வருவதாக அந்த கிராம மக்களும், கல்வி அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர். கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெ.கா.வீரட்டிக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 45-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் மற்றும் மாநில செயலாளர் தலைமையில் சங்க நிர்வாகிகள் இயக்குனர்களுடன் சந்திப்பு

✅தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் ,மாநில செயலாளர் திரு.ஏ.இரமேஷ் ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர்களை நேற்று சந்தித்தனர்.
✅முக்கிய கோரிக்கைகள் மற்றும் விவாவதங்கள்.
✅CPS ஐ GPF - ஆக மாற்றும் கருத்துருக்களை அரசுக்கு அனுப்ப போவதாக இயக்குனர் உறுதிமொழி.
✅01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான பணப்பலன் பெறுவது நிதித்துறையின் பரிசீலினையில் உள்ளதாக இயக்குனர் தெரிவிப்பு.
✅அலகு விட்டு அலகு மாறுதல் ஆண்டுதோறும் நடைப்பெற வேண்டுமெனக் கோரிக்கை.

முதுநிலை ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதி என்ன? - அறிவிப்பு இல்லாததால் குழப்பம்


முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, என்ன என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடாததால், விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

உபரி ஆசிரியர்கள் விவரங்களை டிச.20 க்குள் அளிக்க உத்தரவு.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் குறித்த விவரங்களை டிசம்பர்10-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்களை எடைக்கு போட்ட வழக்கு முன்னாள் கல்வி அதிகாரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கோவையில் பாடபுத்தகங்கள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் சி.இ.ஓ. ராஜேந்திரனின் முன்ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டி தள்ளுபடி செய்தது. விரைவில் அவர் கைதாவார் என்று தெரிகிறது. கடந்த 2011ம் ஆண்டில் அரசு பாடப்புத்தகங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

அரசுப் பள்ளிக் காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பு அதிகரிப்பு

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் காவலாளிகளுக்கு ஈட்டிய விடுப்பை 30 நாள்களாக அதிகரித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இரவுக் காவலாளிகளுக்கான பணியிடம் கோடை விடுமுறை உள்ள பணியிடமாகக் கருதப்பட்டு அவர்களுக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போன்று ஓராண்டிற்கு 17 நாள்கள் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்பட்டு வருகிறது.

அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை

உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில்.
செப்டம்பரில் தங்களின் ஊதியம் = Pay-13,380(pay+G.P+P.P) + DA-8697(72%)+ HRA-760+ MA-100=22,937.(உத்தேசமாக)
அக்டோபர் மாதம் மொத்தம் -31 நாட்கள்.

பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்


உச்சநீதி மன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக்கோரி ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் சென்னையில் நேற்று உண்ணா விரதம் இருந்தனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த உண்ணாவிரதத்தில் பல்வேறு பட்டதாரி சங்கங்கள் பங்கேற்றன.

ஆப்பிள் மேல் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான காரணங்கள்


ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது. 
யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது.

PLU code (price lookup number) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா / மரபணு மாற்று உற்பத்தியா / Chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

பகுதி நேர ஆசிரியர்களை பந்தாடும் தமிழக அரசு சம்பள நிலுவை தொகை வழங்க நிதி இல்லையாம்


பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு என கடந்த பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கண்டு கொள்ளப்படவில்லை. ஆசிரியர்களின் தொடர்ச்சியான முயற்சியால், கடந்த வாரம் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அங்கன்வாடி பணியாளருக்கான நேர்முகத் தேர்வு திடீரென ரத்தானதால் சாலை மறியல்


முன்னறிவிப்பின்றி, அங்கன்வாடி பணியாளருக்கான நேர்முகத் தேர்வு திடீரென ரத்தானதால், ஆர்வமுடன் பங்கேற்க வந்த பெண்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை, இடிக்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம்


இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை, இடிக்க வலியுறுத்தி, குழந்தைகளின் பெற்றோர், நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்னர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்

மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் பங்குபெற்ற ஆய்வுக் கூட்டம் இன்று 24/11/2014 அன்று அண்ணா பல்கலைகழக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தொடக்க கல்வித்துறை புதிய உத்தரவு ஆசிரியர்கள் உயர்கல்வி பயில அனுமதி பெற புதிய வழிமுறை

தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பயில சம்பந்தப்பட்ட துறையின் முன்அனுமதி பெறுவது அவசியம். இந்த அனுமதியை பெற உரிய அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

விடலை பருவத்தினருக்கு அறிவியல் கலந்த உண்மைகளை கூற ஆசிரியர்களுக்கு அறிவுரை

விடலை பருவத்தினருக்கு அறிவியல் கலந்த உண்மைகளை கூறுமாறு ஆசிரியர்களுக்கு மனநல சிறப்பு டாக்டர் பாபு அறிவுரை வழங்கினார். சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில், மாவட்ட பள்ளி கல்வி துறை, செல்லமுத்து அறக்கட்டளை, சத்தியசாயி சேவா சமிதி சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கான, "மாணவர் மனநலம் காப்போம்" என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில் அவர் பேசியதாவது: மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டிய கடமை தலைமை ஆசிரியர்களுக்கு உள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு விண்ணப்பத்தில் குழப்பம்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதியானோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவங்கள் தற்போது விநியோகிக் கப்பட்டு வருகின்றன. விண்ணப்பம் பூர்த்தி செய்து அளிக்க வரும் 26-ம் தேதி கடைசி நாள்.விண்ணப்பத்துடன் படிவத்தை நிரப்ப உதவும் வழிமுறை கையேடு ஒன்றும் கொடுக்கப்படுகிறது.

பள்ளிகளின் வசதி பற்றியும் ஆய்வு : பிளஸ் 2 தேர்வு ஆய்வுக்கூட்டம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுத் தேர்வு நடத்துவதற்கான தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது. அதன்படி, அந்தந்த மாவட்ட உள்ளூர் விடுமுறைகள் எந்தெந்த தேதிகளில் வருகிறது, அந்த தேதிகளில் தேர்வு நடத்தினால் மாணவர்களுக்கு பிரச்னை வருமா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். 

'வல்லமை தாராயோ இந்த மாநிலம் குழம்பியே தவிப்பதற்கே': டி.ஆர்.பி., வேண்டுதல்? பொதுமக்கள் தவிப்பு!

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, என்ன என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடாததால், விண்ணப்பதாரர்கள் மத்தியில், குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு-இந்த வாரம் திருவள்ளூர் மாவட்டம்


புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டம்  -பற்றிய பதிப்பு வெளியிடப்படும்   -இந்த வாரம் திருவள்ளூர்   மாவட்டம் -புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு எடுத்து கூறுங்கள்.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

அரசு பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, வேலையில்லா ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

முப்பருவ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு முதல் சவால்: தேர்ச்சி விகிதம் குறையுமா?

தமிழகத்தில், கடந்த கல்வியாண்டு வரை, முப்பருவ பாடத்திட்டத்தின்படி பயின்ற மாணவர்கள், முதல்முறையாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இக்கல்வியாண்டில் எதிர்கொள்கின்றனர்.

"தமிழகத்தில் தாய்மொழியில் உயர்கல்வி சாத்தியமில்லை என்பது வெட்கக் கேடானது"

பத்து நாடுகளின் மக்கள் தொகையை கொண்ட தமிழகத்தில், தாய்மொழியில், உயர்கல்வி சாத்தியமில்லை என்பது வெட்கக் கேடானது, என, இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர், பி.எச்.அப்துல் ஹமீத் குறைபட்டுக்கொண்டார்.

சென்னை பல்கலையின் இதழியல் துறை சார்பில், வானொலி குரலும் தமிழும் என்ற கருத்தரங்கம் சமீபத்தில் நடந்தது. அதில், இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர், பி.எச்.அப்துல் ஹமீத் பேசியதாவது: முன்பெல்லாம், ஊடகங்களில், தகவல், கல்வி, பொழுதுபோக்கு என்ற கலவை இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில், பொழுதுபோக்கு மட்டுமே, மிகுதியாக இருக்கிறது.

அவற்றில் ஒலிக்கும் குரல்களில், ஒலிப்பு முறையும், முறையாக இல்லை. இப்படியே போனால், இன அடையாளம் மட்டுமல்லாமல், மொழி அடையாளத்தையும் நாம் இழந்து விடுவோம். மொழி அடையாளம், மனிதனுக்கு மிக முக்கியமானது.

தமிழறிஞர்கள், பெயர் சொல்லுக்கு தமிழ் வார்த்தைகள் கண்டுபிடிப்பதிலும், மேடையில் பேசுவதிலும், பட்டி மன்றம் நடத்துவதிலும், திரைப்படங்கள் எடுப்பதிலுமே பெருமை கொள்கின்றனர். ஆனால், இது, தமிழகத்திற்கும், தமிழின மக்கள் தொகைக்கும் போதாது. காலத்தால், மிக பிந்தைய சிங்களத்தில் கூட, பொறியியல் கல்வி உட்பட அனைத்து கல்வியும் கிடைக்கிறது.

பல சாதனைகளை படைத்து வரும் நார்வே, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளைப் போல, 10 நாடுகளின் மக்கள் தொகையை கொண்ட தமிழகத்தில், தாய்மொழியில், உயர் கல்வி சாத்தியமில்லை என்பது, வெட்கக் கேடானது.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், தாய்மொழி கல்வியால், மற்ற மாநிலங்களுக்கு வேலைக்கு செல்வது பாதிக்கப்படும் என்கின்றனர். தமிழில் படித்தவர்களாவது, தமிழகத்திற்குள் சேவை செய்யட்டுமே. தமிழறிஞர்கள், அறிவியல் கல்வியை, தாய்மொழியில் கற்பிக்க முயற்சி எடுக்காவிட்டால், அடுத்த தலைமுறை, தாய்மொழி அறியாதவர்களாகத்தான் இருப்பர். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமைக்கான மனு: தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றம்


மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின்போது, இருவர், ஒரே கட் - ஆப் மதிப்பெண் பெற்றால், தமிழ் பாட மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க கோரி தாக்கலான மனுவை, தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றி, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.

அனைத்துப் பள்ளிகளிலும் யோகாவை கட்டாயப் பாடமாக்க மத்திய அரசு திட்டம்


அடுத்த கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், யோகாவை ஒரு பாடமாக சேர்க்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ துறைக்கான அமைச்சர், ஸ்ரீபத் நாயக் கூறியதாவது: யோகா கலையை கற்பதன் மூலம் இளம் தலைமுறையினர், எதிர்காலத்தில் நல்ல பண்பு மற்றும் உடல் நலம் உள்ளவர்களாக தங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

கணிதத்தை எளிமையாக்கும் டி.வி.டி. மற்றும் புத்தக வெளியீட்டு விழா


கணித பாடத்தை மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, உமாதாணுவின், டி.வி.டி., மற்றும் புத்தக வெளியீட்டு விழா, கோவை மணி மேல்நிலைப் பள்ளி, நானி கலையரங்கில், நாளை(நவம்பர் 24) மாலை 4.00 மணிக்கு நடக்கிறது.

சம்பளத்தை பள்ளி நிர்வாகத்திடம்தான் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம்


அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான சம்பளத்தை, பள்ளி நிர்வாகத்திடம் வழங்கும்படி, மாவட்ட கல்வி அதிகாரிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு


குடும்பம், வாழ்விட சூழல், சினிமா, டிவி தாக்கம், கிரிக்கெட், ஆசிரியர்களின் கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்திருப்பது, கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறைந்த செலவில் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு: மத்திய அரசு திட்டம் ஜனவரியில் அமல்

இந்தியாவில் பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக உள்ளார். குறிப்பாக குறைந்த செலவில் அனைத்து வகை சிகிச்சைகளையும் ஒவ்வொரு இந்தியரும் பெற வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் மருத்துவ திட்டமாகும்.

தமிழ்நாட்டில் 15 லட்சம் குடும்பங்களில் ஒருவர் கூட படிக்கவில்லை: கணக்கெடுப்பில் தகவல்

‘‘தமிழ்நாட்டில் 15 லட்சம் குடும்பங்களில் ஒருவர் கூட படிக்கவில்லை’’ என மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த 2011–ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் படிப்பு அறிவு பெற்றவர்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டது. அதில் இந்திய அளவில் எழுத படிக்க தெரிந்தவர்களின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

முப்பருவ கல்வி முறை மாணவர்கள் பகீரத பிரயத்தனம்! தேர்வுக்கு தயார்படுத்த பள்ளிகள் தீவிரம்

தமிழகத்தில், கடந்த கல்வியாண்டு வரை, முப்பருவ பாடத்திட்டத்தின் படி பயின்ற மாணவர்கள், முதல் முறையாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இக்கல்வியாண்டில் எதிர்கொள்கின்றனர். ஒட்டு மொத்த பாடங்களையும், ஒரே சமயத்தில் எழுதுவதால், தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புகள் உள்ளதாகவும், மாணவர்களை தயார்படுத்துவதில், மிகுந்த சிரமம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்க உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு, சிறப்பு கையேடு வழங்கி பயிற்சி அளிக்க தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடக்கும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெறும் வகையில், பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஆட்டிசம் குறைபாடு நீக்கஒட்டக பால் மருந்து

'குழந்தைகளைப் பாதிக்கும் மூளை வளர்ச்சி குறைபாடான, மனஇறுக்க (ஆட்டிசம்) நோயை, ஒட்டகப் பால் குணப்படுத்தும்' என, சிறப்புக் குழந்தைகளுக்கான, 'பாபா பரீத்' மையமும், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த, டாக்டர் ரெவின் யாகிலும் இணைந்து தெரிவித்துள்ளனர்.

முடக்கம்? : தனியார் பள்ளி வாகன கண்காணிப்பு குழு... : மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

பள்ளி வாகனங்களை கண்காணிக்க, அமைக்கப்பட்ட குழு செயல்படாமல், முடங்கி கிடப்பதாகவும், அதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தனியார் பள்ளி வாகனங்களை கண்காணிக்க, பொன்னேரி ஆர்.டி.ஓ., தலைமையில், கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழுவில், பொன்னேரி டி.எஸ்.பி., வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றனர்.

மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவர்கள் வாந்தி மயக்கம்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ள இருகையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்புவரை 40 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். நேற்று தலைமை ஆசிரியர் அடைக்கலசாமியும், சமையலர் செல்வக்குமாரியும் விடுப்பில் இருந்துள்ளனர்.

Saturday, November 22, 2014

மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது அடியாட்களை அழைத்துவந்து கொடூர தாக்குதல்!

வகுப்பறையில் மாணவனை கண்டித்ததற்காக, அடியாட்களை அழைத்து வந்து ஆசிரியரை தாக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வருகிறது லயோலா மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி. இங்கு பாஸ்கர் என்பவர் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று அவர் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, அர்னால்டு என்ற மாணவன் பாடத்தை கவனிக்காமல் சக மாணவனுடன் அரட்டை அடித்தபடி விசில் அடித்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது.  இதை கவனித்த பாஸ்கரன் அந்த மாணவனை கண்டித்ததாக சொல்லப்படுகிறது.

முழு நேர நியமனத்துக்கு போட்டித் தேர்வு:பகுதி நேர கலையாசிரியர்கள் கலக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில், பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம், 2000 ரூபாய் உயர்த்தியுள்ளதாக, அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், போட்டித்தேர்வு வழியாகவே முழுநேர கலை ஆசிரியர்கள் நியமனம் என்ற அறிவிப்பு, பகுதி நேர ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

உதிரி ஆசிரியர்கள் எத்தனை பேர்? பள்ளிகளில் கல்வித்துறை திடீர் ஆய்வு

மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுகுறித்து, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி, பள்ளி நிர்வாகத்தினர் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவியை பிரம்பால் அடித்த விவகாரம்: ஆசிரியர்களிடம் தாசில்தார் விசாரணை

தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் வசந்தா. இவருடைய பேத்தி சிந்துஜா (வயது14). இவருடைய அம்மாவும், அப்பாவும் பிரிந்து வாழ்ந்து வருவதால் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்.

ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக திரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவு

ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாதவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுக உத்தரவு

அதிக கட்டணத்தால், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர முடியாத, 28 மாணவர்கள், உச்சநீதிமன்றத்தை அணுக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியர் சம்பளம் இனி மாதம் ரூ.7000: அரசு உத்தரவு

பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, 5,000 ரூபாயில் இருந்து, 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், கடந்த 2011ல், அரசு பள்ளிகளில், தையல், ஓவியம், உடற்பயிற்சி, இசை ஆகியவற்றிற்கு, 16,549 பகுதி நேர ஆசிரியர், 5,000 ரூபாய் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.

தகுதித் தேர்வு மூலமாக மட்டுமே சிறப்பாசிரியர்கள் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை

உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் சார்பாக 2014-செப்டம்பர் மாதம் நடைபெற்ற FA செயல் திட்டம் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சுட்டி விகடனனின் சான்றிதள் வழங்கி பாராட்டுதல் விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுட்டி விகடன் நடத்திய செயல் திட்டம் FA போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும்,அவர்களை ஊக்கபடுத்திய ஆசிரியைகளுக்கும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.

அதிகரிக்கும் இலவச ‘லேப்டாப்’ விற்பனை; கண்டுகொள்ளாத கல்வித்துறை

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் லேப்டாப்க்கு சந்தையில் கிராக்கி அதிகரித்துள்ளது. இதற்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணமாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலை பல்கலை 2 பேராசிரியர்கள் உள்பட 6 பேர் பணி நீக்கம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013ல் தமிழக அரசு எடுத்துக் கொண்டது. இந்நிலையில் முறைகோடாக பதவி உயர்வு பெற்றவர்கள், போலிசான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்கள் ஆகியோர் கணக்கு எடுக்கப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், விசாரணையும் நடத்தப்பட்டது. 

கல்வி உதவித்தொகை முறைகேடு:16 பேருக்கு சிக்கல்

நாமக்கல் மாவட்டத்தில், ஆதிதிராவிட பிரிவைச் சேர்ந்த மற்றும் சுகாதாரமற்ற தொழில் புரியும் பெற்றோரின், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில், கடந்த சில ஆண்டுக்கு முன், 68.46 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது.

மதிய உணவில் அழுகிய முட்டை?பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம்

இளையனார்குப்பம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள், நேற்று மாலை, திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம், இளையனார்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில், நேற்று மதியம், 400 மாணவ, மாணவியர், மதிய உணவு சாப்பிட்டனர். மாலை, 3:00 மணியளவில், நான்கு முதல் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் என, எட்டு பேர் மயங்கி விழுந்தனர்.

தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு


தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டு 01-04-2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு நிகரான தொகையை அரசும் தனது பங்களிப்பாக வழங்கும்.

மானியம் விலை சிலிண்டர் பெற வங்கிக்கணக்கு கட்டாயம்: ஜன. 1 முதல் அமல்!


மானியவிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் பெற வங்கிக் கணக்கு கட்டாயம் என்பதை வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படவுள்ளது.

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்


ஒரு காலத்தில் போதுமான, சத்தான உணவின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் என்றால், தற்போது அதிகப்படியான உணவால் அல்லது உடல் உழைப்பின்மையால் உடம்பு பெருத்து அவதிப்படும் நிலை அதிகரித்திருக்கிறது. 'எனக்கு எடை கூடிடுச்சு...

2001ம் ஆண்டு குரூப்-1 தேர்வு விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


’கடந்த 2001ல், சர்சைக்குரிய டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வெழுதிய, 800 பேரின் விடைத்தாள்களையும் சீலிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும்’ என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.,) சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கி பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மதுரையை சேர்ந்தவர் தமிழரசன், வக்கீல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது: நாடு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின் சார்பில் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏ.டி.எம். மையங்கள் வைக்கப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்று வரிசையில் நின்று பணம் எடுப்பதை தவிர்க்கவே ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கும் வசதி கொண்டு வரப்பட்டது.

தர மதிப்பீடுகள் அவசியமே!


மத்திய அரசின் கல்வி அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுக் கல்வித் துறை, 2000ம் ஆண்டில், அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷா அபியான்) என்ற, புதிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.ஆரோக்கியமான புதிய கற்பித்தல் முறை, ஆடல் பாடல்களுடன் குழந்தைகளின் கற்றல், போதிய கல்வித் திறன்களை மாணவர்கள் எட்டுதல், தேக்கமில்லாத 100 சதவீத தேர்ச்சி என்பது, அரசின் முடிவு. இதைக் கருத்தில் கொண்டே, எட்டாம் வகுப்பு வரை, கட்டாயத் தேர்ச்சி முறையை, மத்திய அரசு சட்டமாக்கியது.

10, பிளஸ் 2 தேர்வில் நஷ்டத்தை சமாளிக்க விடைத்தாளில் 12 பக்கங்கள் வரை குறைக்க தேர்வு துறை உத்தரவு


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு தேர்வுத் துறை வழங்கும் விடைத்தாளில் 8 முதல் 12 பக்கங்கள் வரை குறைத்து வழங்க தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்கிறது. இதற்கான கேள்வித்தாள் தயாரிப்பது மட்டும் அல்லாமல் விடைத்தாளையும் தேர்வுத்துறையே வழங்கி வருகிறது.

மாணவர்களின் அடைவுத்திறன் மேம்பட வலியுறுத்தல்


பொள்ளாச்சியில், மாணவர்களின் அடைவுத்திறன் மேம்பட பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை, வால்பாறை ஒன்றியங்களை சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு 1000 கோடி கல்வி உதவித்தொகை


ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2014-15ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ^1000 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார். ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ தொடர்பான, 2014-15ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் முன்னேற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது.

ஆசிரியர் நியமனத்தில் மோசடி: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை


அரசு உதவிப்பெறும் துவக்கப் பள்ளிக்கு, புதியதாக ஆசிரியர் நியமனம் செய்ததில், ஊழல் நடந்ததாக எழுந்த புகார் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இண்டர் நெட் பயன்பாடு இந்தியா இரண்டாமிடம்


உலகளவில் இண்டெர்நெட் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் தற்போது இண்டெர்நெட்டை பயன்படுத்துவோரின் எணணிக்கை 213 மில்லியனாக உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் பற்றி டிசம்பர் 11-ல் முடிவு

இரயில்வே, பாதுகாப்புத் துறை உட்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர் கள் இணைந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது பற்றி டிசம்பர் 11-ம் தேதி டெல்லியில் நடைபெறும் சிறப்பு மாநாட்டில் முடிவு செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி அமைச்சருடனான பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சந்திப்பின் எதிரொலி

அநைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட அறிக்கையில் வெளியான பகுதிநேர ஆசிரியர்களின் ஊதிய உயர்வு ஏப்ரல் 2014 முதல் முன் தேதியிட்டு வழங்கப்பட வாய்ப்பு. நிலுவைத் தொகையும் ECS முறையில் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

Very good happy news to Part time instructors????

Very good happy news to Part time instructors to Government Schools under SSA appointment Salary is increased from Rs.5000/- to Rs.7000/- from April 2014 on wards G.O. No. (Ms) 186 Dated:18.11.2014.

பாட நேரம் அதிகரிப்பிற்கு விரிவுரையாளர்கள் எதிர்ப்பு


அரசு முதல்நிலை கல்லூரிகளில், தற்போது பாட நேரம் வாரத்திற்கு 16 மணிநேரமாக உள்ளது. இதை 22 மணி நேரமாக அதிகரித்து, அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, விரிவுரையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆங்கில பள்ளி மூடப்படுவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு


உரிகம் ஐந்து விளக்கு பகுதியில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பி.இ.எம்.எல்., ஆங்கில பள்ளியை காப்பாற்ற வலியுறுத்தி, மாணவர்கள் ஊர்வலமாக சென்று, தங்கவயல் கல்வி அதிகாரியிடம் மனு வழங்கினர்.

வெளிமாநில குழந்தை தொழிலாளர்களுக்கு விடிவு காலம்!


அடிப்படை கல்விக்கு வாய்ப்பு கிடைக்காத, வெளிமாநில குழந்தை தொழிலாளர்களுக்காக, கோவை மாவட்டத்தில் சிறப்பு பள்ளி துவங்கப்பட்டுள்ளது. இவை முறையாக செயல்படுத்தப்பட்டால், அவர்கள் கொத்தடிமைகளாக உருவாகும் நிலை தடுக்கப்படலாம்.

அரசு பள்ளிகளில் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் ஆய்வு


அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்ட நிதி மூலம் அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத உச்ச வயதுவரம்பு குறைப்பு?


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுபவர்களுக்கான உச்ச வயது வரம்பை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு-இந்த வாரம் அரியலூர் மாவட்டம்


புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டம்  -பற்றிய பதிப்பு வெளியிடப்படும்   -இந்த வாரம் அரியலூர்   மாவட்டம் -புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு எடுத்து கூறுங்கள்.

பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், நேர விரயம் மற்றும் கண்காணிப்பாளரின் கவனத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு முதல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைத்தாளை இணைத்து வழங்கப்பட்டது. எழுதாத பக்கங்களில், கிராஸ் கோடு போட அறிவுறுத்தப்பட்டது.

அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்துக்கு தடை - மதுரை ஐகோர்ட்

தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்தது. திருமங்கலம் எம்.புளியங்குளம் மீனாலட்சுமி தாக்கல் செய்த மனு: சமூக நலத்துறை சார்பில், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் காலியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நவ., 25, 26ல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு

மதுரையில் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு நவ., 25, 26ல் நடக்கிறது. இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் காற்று வாங்கும் தொடக்கப்பள்ளிகள் : 4 மாணவர்களுக்கு பாடம் நடத்த 2 ஆசிரியர்கள்

அரசு சார்பில் ஏராளமான நலத்திட்டங் கள் வழங்கினாலும் தமிழகத்தில் உள்ளபல தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்க எண்ணிகையிலேயே மாணவர்கள் படிக்கின்றனர். சேர்க்கையை அதிகரிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஆங்கில வழிக் கல்விமுறையும் கைகொடுக்கவில்லை.

அனைவருக்கும் கல்வித் திட்டம்: 1- 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழாண்டில் முக்கியத்துவம்

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்விக்கு நிகழாண்டு முக்கியத்துவம் வழங்க அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்களுக்கு மிகக் குறைந்த வயதிலேயே மொழியறிவு, கணித அறிவு போன்றவற்றில் புரிதலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியது:

அடிப்படை வசதிகள் கேட்ட பள்ளி மாணவன் சஸ்பெண்ட்

திருச்சி, உறையூர் நாச்சியார் பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவரது மகன் சந்தோஷ், 17, இவர், திருச்சி, தில்லைநகர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் மேல்நிலைப் பள்ளியில், ப்ளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். பள்ளி வகுப்பறையில், மின் விளக்கு, மின் விசிறி உள்ளிட்டவை செயல்படுவது இல்லை. குடிநீர் வசதி இல்லாததால், கடந்த மாதம், 9ம் தேதி, பள்ளி உதவி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வில், தமிழக அரசின் சீராய்வு மனுவின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அமையும் என தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வு எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு சார்பில் தொடுக்கப்பட்ட சீராய்வு மனுவின் (TRB RC.NO.805 / TET / 2014 DATED.13.11.2014)

உச்சநீதிமன்றத்தில் 5% மதிப்பெண் தளர்வு மற்றும் அரசாணை எண்.71 சார்பான வழக்கின் நிலை

SLP(C) NO. 29245 OF 2014

ITEM NO.51 & 66 COURT NO.8 SECTION XII
S U P R E M E C O U R T O F I N D I A
RECORD OF PROCEEDINGS
Petition(s) for Special Leave to Appeal (C) No(s). 29245/2014

கல்வித்துறை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டும்: ஸ்மிருதி இரானி


உயர் கல்வித்துறையில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருவதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

3100ம் ஆண்டு வரை தேதிக்கு கிழமை சொல்லும் சிறுவன் : அதிசயிக்கின்றனர் பெற்றோர், ஆசிரியர்கள்


கொளப்பாக்கத்தை சேர்ந்த சேசுராம் என்ற 10 வயது சிறுவன், மொத்தம், 1090 ஆண்டுகளில் ஏதாவது ஒரு தேதியை (3,97,850 நாட்கள்) கூறி, கிழமை கேட்டால், மறு நொடியே, சம்பந்தப்பட்ட தேதிக்கான கிழமையை கூறுகிறான்.
அவனுடைய தனித்திறமை குறித்து, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மிகவும் பிரமிப்படைகின்றனர். ஆனால், சேசுராமுக்குள் ஒளிந்திருந்த இந்த திறமை, எப்படி உருவானது என, அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மனவளர்ச்சி குறைபாடுள்ள குழந்தையா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை


'மதி இறுக்கம் என அழைக்கப்படும், மனவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான இடமாற்றத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவர்களை தானாக முன்வந்து ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சான்றிதழ் தொலைந்துவிட்டால் திரும்ப பெறுவது எப்படி? - தெரிந்துகொள்வோம்


ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.

இந்திய சி.பி.எஸ்.இ. சான்றிதழ்களை பிரிட்டன் பல்கலைகள் இனி ஏற்கும்!


இந்திய கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ. வழங்கும் பிளஸ் 2 சான்றிதழை ஏற்றுக்கொள்ள, பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் முடிவுசெய்துள்ளன. இதன்மூலம், சி.பி.எஸ்.இ. படித்த மாணவர்கள், பிரிட்டன் பல்கலைகளில், இளநிலைப் படிப்புகளில் எளிதாக சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!


ஆபாச வலைதளங்களுக்கு பள்ளி மாணவர்கள் அடிமைகளாகி வருவதாக, ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் தெரிவிக்காமல் மாற்றப்பட்ட இடைத்தேர்வு அட்டவணை


இரண்டாம் இடைப்பருவ தேர்வு அட்டவணை திடீரென மாற்றப்பட்ட தகவல், மாணவர்களுக்கு தெரிவிக்கப்படாததால், நேற்று (நவம்பர் 17) தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர்.

பஸ்சில் இடம் பிடிக்கும் தகராறில் பள்ளி மாணவன் கழுத்து அறுப்பு சக மாணவர்கள் வெறிச்செயல்

சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் தெற்கு தில்லை நகரைச் சேர்ந்தவர் கவியரசன் (14), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கெங்கவல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி பஸ்சில் செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல, அந்த பஸ்சில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இருக்கையில் இடம் பிடிப்பது தொடர்பாக, சக மாணவர்கள் சிலருடன் கவியரசனுக்கு தகராறு ஏற்பட்டது.

50 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தக் கோரிக்கை

சட்டப்பேரவையில் அறிவித்தவாறு 50 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாக விரைவில் தரம் உயர்த்த வேண்டும் என தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதிகரிக்கும் ஆங்கில மோகத்தால் அரசு தொடக்கப்பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர்கள்

அதிகரித்து வரும் ஆங்கில மோகத்தால் அரசு தொடக்கப் பள்ளிகளில் போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாமல் குறைந்து வருகிறது. இதற்கு அடிப்படை காரணம் மக்களிடையே வளர்ந்து வரும் ஆங்கில மோகம் தான். அரசு பள்ளிகளில் உள்ளது போல் பரந்துவிரிந்த விளையாட்டு மைதானம், பெரிய விசாலமான வகுப்பறைகள், நல்ல காற்றோட்டமான சூழ்நிலை பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இல்லை. இருப்பினும் தற்போது உள்ள நிலையில் சாதாரண வேலை பார்ப்பவர்கள் கூட தனியார் மெட்ரிக் பள்ளிகளையே நாடி வருகின்றனர்.

பிளஸ்–1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி பள்ளி கல்வித்துறை செயலாளர் த.சபீதா பேட்டி

பிளஸ்–1 மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ தேர்ச்சி என்று அறிவிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TRB : ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் 25 பேர் விரைவில் நியமனம்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வேளாண்மை கல்வி கற்பிப்பதற்காக 25 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். அரசு உத்தரவுப்படி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா 25 பேர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் விபுநய்யரிடம் ஒப்படைத்துள்ளார்.

மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வேன்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தவேண்டும் போலீசார் கண்டிப்பான உத்தரவு

சென்னையில் பள்ளிக்கூடங்களுக்கு மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும் என்று போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கல்வித்துறை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டும்: ஸ்மிருதி இரானி

உயர் கல்வித்துறையில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருவதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறைந்த பட்ச ஓய்வு ஊதியம் ரூபாய் 6,500 வழங்கிடவேண்டும். கோசியாரி கமிட்டி பரிந்துரைத்த ரூபாய் 3,000 அனைவருக்கும் இடைக்கால நிவாரணமாக வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் குவிக்க ஆலோசனை


பாடங்களை புரிந்துகொண்டு, கவனத்துடன் படித்தால் பொதுத்தேர்வில் மதிப்பெண்களை குவிக்கலாம் என, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் அறிவுரை கூறினர்.

பள்ளி மாணவன் இறப்பு எதிரொலி: ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மறியல்


பள்ளி மாணவன் இறந்த வழக்கில் வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இறந்த மாணவரின் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டதால் நிலக்கோட்டையில் பதட்டம் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 11 ம் வகுப்பு மாணவர் சக மாணவர் அடித்ததால் இறந்தார்.

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு


மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவது சார்பான கடிதத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மதிப்புமிகு நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டிய கடித நகல்...

மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்கு 113 அம்சங்கள்:மாநில அரசு உத்தரவில் சட்ட வரைவு வெளியீடு


பள்ளி, கல்லுாரிகளில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 113 அம்சங்கள் அடங்கிய விதிமுறைகளை அமல்படுத்த, கர்நாடக மாநில அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டவரைவு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை கிடைப்பதில் தாமதமானாலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது


சிலருக்கு முதல் நேர்முகத் தேர்விலேயே வெற்றி கிடைத்து விடும். சிலருக்கு ஐந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பின்பும், வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இத்தகைய மாணவர்கள் எந்த நேரத்தில் தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள்.

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசு வேலை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு


தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவர் என்ற, தமிழக அரசின் உத்தரவு சரியானதே என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில் பள்ளிகளுக்கிடையே அதிக முரண்பாடு


பிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில், பள்ளிகளுக்கிடையே, அதிக முரண்பாடு இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகி உள்ளது. அரசு பள்ளிகளில், பாடத்திற்கு 10 மதிப்பெண் வீதம் வாங்கினால், பிளஸ் 1 பாஸ் எனும் நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 40 முதல் 60 மதிப்பெண் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பரவும் வன்முறை கலாசாரம்.. முளையிலே கிள்ளி எறிய 'கவுன்சிலிங்'!

பள்ளி மாணவர்கள் மத்தியில், அதிகரிக்கும் வன்முறைகளை தவிர்க்க, பிரச்னைகளுக்குரிய மாணவர்களை கண்டறிந்து தனித்தனியாக சிறப்பு கவுன்சிலிங் வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் மத்தியில், சினிமா, 'டிவி', மொபைல் போன், இன்டர்நெட் உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால், வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், மாணவர்கள் ஈடுபடும் குற்றச்சம்பவங்கள், பெருமளவில் அதிகரித்துவிட்டது.

தொழிற்கல்வி ஆசிரியர்களின் கூடுதல் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூடாது

திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த 7 தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 1990 முதல் 1994 வரை நாங்கள் 7 பேரும் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோம். தொழிற்கல்வி ஆசிரியர் என்பதால் பதவி உயர்வு இல்லை. அதனால், எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

விண்டோஸ்: எளிதாகவும் விரைவாகவும் இயக்க டிப்ஸ்

கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைப் போல, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அவ்வளவாக ஆர்வமூட்டும் வகையில் இருப்பதில்லை. இருப்பினும் இதனை எளிதாகவும், விரைவாகவும் இயக்கி நமக்குத் தேவயானதைப் பெற, இங்கு சில உதவிக் குறிப்புகள் தரப்படுகின்றன. இவை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப் டாப் கம்ப்யூட்டர் மற்றும் அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் பயன்படுத்தக் கூடியவையே.

Sunday, November 16, 2014

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக புகைப்படத்துடன் கூடிய மாற்றுச்சான்றிதழ் இணையம் வழியாக வழங்கி மாண்புமிகு அமைச்சர்கள் முதன்மை கல்வி அலுவலருக்கு புகழாரம்


பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2014-2015 ஆம் கல்வியாண்டிற்கான புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான் அறிவியல் கண்காட்சி திறப்பு விழா இன்று 16.11.2014 (ஞாயிற்றுக்கிழமை) புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் செ.மனோகரன் தலைமை வகித்தார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் புதுக்கோட்டை வி.ஆர்.கார்த்திக்தொண்டைமான், ஆலங்குடி கு.ப.கிருஷ்ணன் , திருமயம் பி.கே.வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்து அறிவியல் கண்காட்சியைப்பற்றி பாராட்டி பேசினார்கள். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் வரவேற்று பேசினார்.

ஆர்.டி.ஐ.யின்கீழ் தகவல் தராத 50 அதிகாரிகளுக்கு 25,000 அபராதம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு துறைகளில் தகவல்கள் கோரப்பட்டிருந் தது. ஆனால், தகவல்களை குறிப்பிட்ட காலத்துக்குள் அளிக்காமல், அதிகாரிகள் சுணக்கம் காட்டி வருவதாக, மாநில தகவல் ஆணை யர் ஹபீஸ் உஸ்மானுக்கு புகார்கள் குவிந்தன.

பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு

புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டம் 2003 ஏப்., 1ல் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஊதியத்திற்கு தகுந்தாற்போல் கருவூலத்திலிருந்து மாதந்தோறும் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

TNPSC போட்டி தேர்வு மூலம் கல்வித்துறையில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தேர்வாகி, கல்வித் துறையில் பணியில் சேர்ந்தவர்கள், பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யில் தேர்வான 1,500க்கும் மேற்பட்டோர் 2013 மே மாதம் கல்வித்துறையின் கீழ் பல்வேறு ஊர்களில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தனர்.

இரண்டாவது மனைவிக்கும் 'பென்ஷன்' உண்டு; சென்னை உயர் நீதிமன்றம்

இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வழங்க மறுத்த, போக்கு வரத்து கழக பொது மேலாளரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஈரோடு, தாராபுரத்தில், அரசு போக்குவரத்து கழக கிளையில், தொழில்நுட்ப அலுவலராக, பழனிசாமி என்பவர், பணியாற்றி வந்தார். 2011, ஆகஸ்டில், விபத்தில் சிக்கி, கோவை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செப்டம்பர், 13ல், இறந்தார்.

அரசு பள்ளியில் 10 மதிப்பெண் வாங்கினால் பிளஸ் 1 'பாஸ்': உதவிபெறும் பள்ளியில் 60 வாங்க வேண்டுமாம்

பிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில், பள்ளிகளுக்கிடையே, அதிக முரண்பாடு இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலமாகி உள்ளது. அரசு பள்ளிகளில், பாடத்திற்கு, 10 மதிப்பெண் வீதம் வாங்கினால், பிளஸ் 1 பாஸ் எனும் நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 40 முதல் 60 மதிப்பெண் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிறரின் உயிரை காப்பாற்றிய 7 சிறுவர், சிறுமிகளுக்கு வீர விருது!!!

ஆபத்தான சூழ்நிலையில், புத்திசாலித்தனமாக நடந்து, தன் உயிரை பணயம் வைத்து, மற்றவரின் உயிரை காப்பாற்றிய, ஏழு சிறுவர்கள், இரண்டு சிறுமியருக்கு, மாநில அரசு வழங்கும், வீர விருது வழங்கப்படுகிறது.