Pages

Saturday, November 29, 2014

சம்பளம் வாங்க முடியாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்

தேனி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சம்பள கணக்கு எண் வழங்காமல் அரசு உத்தரவு வழங்கப்பட்டதால், சம்பளம் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பலர் தேனி மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த செப்டம்பர் மாதம் பணியில் சேர்ந்தனர். தேனி மாவட்டத்தில் பல புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இதற்கான அரசு உத்தரவும் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த உத்தரவில் சம்பள கணக்கு எண் வழங்கப்படவில்லை. இதனால் எந்த கணக்கில் சம்பளம் வழங்குவது என்பதில் தலைமை ஆசிரியர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பளம் வழங்காமல், அரசு வழிகாட்டுதலை எதிர்பார்த்து காத்துள்ளனர். இதனால் மூன்று மாதங்கள் ஆகிய நிலையிலும் புதியதாக பொறுப்பேற்ற ஆசிரியர்கள் சம்பளம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். முதன்மைக்கல்வி அலுவலர் இந்த பிரச்னையில் தலையிட்டு ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மோகன் வலியுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.