Pages

Sunday, August 31, 2014

புதியதாக நியமனம் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு

DSE - PG ASST JOINING REPORT FORMAT CLICK HERE...

30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் புதியதாக பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களை இயக்குநரின் 1 முதல் 12 முடிய அளித்துள்ள அறிவுரைகளின்படி அனைத்து

ஆசிரியர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பள்ளி மாணவர்களுடன் உரையாற்ற ஏற்பாடு

ஆசிரியர் தினத்தின் பெயரை இனிமேல் சமஸ்கிருத மொழியில் குருஉத்சவ்-2014 என்று அழைக்கப்பட வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நாளில் சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை கேட்க வேண்டுமென நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு: அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதுள்ள 100 சதவீத அகவிலைப்படி, 107 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

1675 புதிய நியமனம் செய்யப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 08.09.2014 அன்று பணியில் சேர இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்று 1675 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அக்கலந்தாய்விற்கான கால அட்டவணை கீழ்காணும் விவரப்படி நடக்கவுள்ளது.

* 01.09.2014 - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும்

* 02.09.2014 - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும்.

கல்வி நிறுவன கட்டடங்களுக்கு ‘சீல்’? உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

கல்லூரி, பள்ளி கட்டடங்களுக்கு, ’சீல்’ வைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களுக்கு, ’தற்போதைய நிலை தொடர வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம், இடைக்கால உத்தரவிட்டு உள்ளது.

ஆசிரியர் நியமன கவுன்சிலிங்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்பட்டுள்ள, நாமக்கல் மாவட்ட ஆசிரியர்களுக்கான நியமன கவுன்சலிங், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், செப்டம்பர், 5ம் தேதி வரை நடக்கிறது.

பிளஸ் 2 தனித்தேர்வு முடிவு தாமதம்; மாணவர்கள் தவிப்பு

கடந்த ஜூனில் நடந்த பிளஸ் 2 உடனடித் தேர்வில் பங்கேற்ற தனித் தேர்வர்களுக்கு, ’சாப்ட்வேர்’ பிரச்னையால், இதுவரை முடிவுகள் வெளியிடாததால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவிப்பில் உள்ளனர்.

பள்ளிக்கு செல்ல மலைப் பாதையில் தினமும் 10 கி.மீ., நடைப்பயண

பாட்டன் காலத்தில் ’தினமும் 10 கி.மீ., நடந்து போய் நான் படித்து வளர்ந்தவன்,’ என்று பல கதைகளை முன்னோர் குரல்களில் நம் காதுகள் கேட்டிருக்கும். இப்போதும் இது போல் பயணித்து பள்ளி செல்வோர் இருக்கலாம். மறுப்பதற்கில்லை. ஆனால் கரடுமுரடான ஒரு மலைப் பாதையில் தினமும் 10 கி.மீ., நடந்து, அதன் பின் பஸ்சில் பயணித்து படிக்கிறார்கள் ஒரு மலைக்கிராமத்து மாணவர்கள் 60 பேர்.

வீடுகளில் பொக்கிஷம் புத்தகங்கள்

புத்தக கண்காட்சி என்பது ஒரே இடத்தில், நூற்றுக்கணக்கான ஸ்டால்கள் அமைத்து, நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை, லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது. இது இன்று உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுக்கும் ஆசிரியர் பணியில் ஒதுக்கீடு வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கும் இடஒதுக்கீட்டில் ஆசிரியர் பணி கோரிய மனு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட் டம், அஞ்சுகுழிபட்டியை சேர்ந்தவர் சரண்யா. ஐகோர்ட் மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனு:நான், டிப்ளமோ ஆசிரியை பயிற்சி முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன்.

கலந்தய்வுக்கு செல்வோர் கவனிக்க...

கலந்தாய்வுக்கு செல்லும் ஆசிரியர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே செல்ல கேட்டுக்கொள்கிறோம். கலந்தாய்வு மையங்களில் மாவட்டத்திற்கு உட்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிகளின் பட்டியல் ஓட்டபட்டிருக்கும்... குறைதபட்சம் 5 இடங்களையாவது வரிசைவாரியாக தேர்வு செய்து அப்பள்ளிகளை குறித்து, பதவி நிலை குறித்து, பள்ளிக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து நன்கு அறிந்துக்கொண்டு கலந்தாய்வு மையத்திற்குள் செல்லுங்கள்....

புதிய ஆசிரியர் பணி நியமனம் : சென்னையில் காலிப்பணியிடம் இல்லை - மூன்று மாவட்டத்தவர் ஏமாற்றம்

சென்னை மற்றும் புறநகர்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதிதாக தேர்வு பெற்றுள்ள, 14,700 ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்குவதற்கான கலந்தாய்வு, இன்று முதல், வரும், செப்., 5ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், 32 மையங்களில் நடக்கிறது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, சி.எஸ்.ஐ., செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கலந்தாய்வு நடக்கிறது.

பள்ளி வளாகத்தில் குப்பை அள்ளும் பணியில் மாணவர்கள்!

பேரம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.

சாலைகளின் சைக்கிள் செல்ல தனிப்பாதை வேண்டும்: சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்

உடல் நலத்திற்கு தேவையான சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறமும், சைக்கிள் செல்ல தனிப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் எழுப்பியுள்ளார்.

Friday, August 29, 2014

அறியப்படாத GOOGLE இன் சில சேவைகள் !!- உங்களுக்காக

1. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search):
தேவையானவற்றைத் தேடுவதற்கு இது ஒரு வேகமான தேடுதளம். இந்தத் தளத்தின் முகவரி encrypted.google.com.வங்கிகள் பயன்படுத்தும் Secure Socket Layers (SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம் முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டு வருகிறது.

ஆசிரியர் கலந்தாய்வு குறித்த சில விளக்கங்கள்

தெரிவுப் பட்டியலில் இடம் பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.அதோடு விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடவும் வாழ்த்துக்கள்.
ஏற்கனவே DTED படிப்பதற்காக கலந்தாய்வில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு இதைப் பற்றிய முன்னறிவு இருக்கும் அதே நேரத்தில் கலந்தாய்வு குறித்து மேலும் சில விளக்கங்களை எழுதுவது நாளை கலந்தாய்விற்கு செல்லும் PG நண்பர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் சிறிது தெளிவை உண்டாக்கும் என நினைக்கிறேன்.

நாளை சொந்த மாவட்டத்தில் பணிநாடும் முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறுகின்றது.

நாளை நான் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஹோலி கிராஸ் பள்ளியில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள போகிறேன்.
எனது சொந்த மாவட்டம் திருவண்ணாமலை. ஆனால் தற்சமயம் வேலூர் மாவட்டத்தில் வசிப்பதால் ஹால் டிக்கெட்டில் நான் வேலூர் மாவட்டம் என்று குறிப்பிட்டேன். மேலும் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு இரண்டையும் வேலூர் மாவட்டத்தில் தான் பூர்த்தி செய்தேன்.

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல்

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி"

புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பு; காலை 9மணி முதல் இணையதள வாயிலாக அந்தந்த மாவட்டத்தில் நடைபெறவுள்ளது

g¤Âç¡if¢ brŒÂ

kh©òäF jäHf Kjyik¢r® mt®fë‹ c¤Âué‹go  MÁça® nj®Î thça¤jhš bjçÎ brŒa¥g£L, MÁça® nj®Î thça¤Â‹ Ïizajskhd www.trb.tn.nic.in -š btëæl¥g£LŸs g£oaèš Ïl« bg‰WŸs 14,700 MÁça®fS¡fhd ãakd¡ fyªjhŒÎ Ïizajs« thæyhf, el¤j¥glΟsJ. muR k‰W« efuh£Á ca®ãiy/ nkšãiy¥ gŸëfëš cŸs  KJfiy MÁça®fŸ / g£ljhç MÁça®fŸ fhè¥gâæl§fŸ k‰W« muR /efuh£Á/ Cuh£Á x‹¿a eLãiy/ bjhl¡f¥ gŸëfëš cŸs g£ljhç MÁça®fŸ/ Ïilãiy MÁça®fŸ fhè¥gâæl§fS¡F MÁça® nj®Î thça« _y« neuo ãakd¤Â‰fhf bjçÎ brŒa¥g£l gâehLe®fS¡F Ïizajs« thæyhf¡  Ñœ¡f©l m£ltizæ‹go fhiy 9 kâ Kjš fyªjhŒÎ el¤j¥g£L, gâãakd MizfŸ tH§f¥gl cŸsd.

இடைநிலை ஆசிரியர்கள் 5% மட்டுமே நியமனம்

தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 95 சதவீதம் பேர் அதிர்ச்சி.கூடுதலாக 5 ஆயிரம் பணியிடங்களாவது நிரப்பப்படுமா? தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 10,726 பெயர்கள் தேர்வுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.  ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.அதாவது இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த 95 சதவீதம் பேர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

TET & PGTRB Posting - Press News

பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச்  சீட்டில் (Hall Ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம்

TNTET & PGTRB: பள்ளியை தேர்ந்தெடுப்பது எப்படி?

தங்களுக்கான பள்ளியை தேர்ந்தெடுப்பதில் பின்வரும் காரணங்களை உற்று நோக்கவும்.
1)பள்ளியில் உள்ள காலிப்பணியிடம் Deployment Post- ஆக மாற வாய்ப்பு உள்ளதா?

Thursday, August 28, 2014

TET & PGTRB ஆன்லைன் கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும்?

ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய நாட்களில் நடைபெறும். கலந்தாய்வு நடைபெறும் இடம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தால் நாளை அறிவிக்கப்படும். காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்க இருப்பதால், கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் அனைவரும் காலை 7.30 மணிக்கே உரிய இடத்திற்கு செல்லவும்.

14700 ஆசிரியர் நியமனங்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு; ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது

முதுகலை ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு ஆகஸ்ட் 30ம் தேதி மாவட்டத்திற்குள் நியமனமும், 31ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் நியமன கலந்தாய்வு நடைபெறும். 

இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு செப்டம்பர் 1ம் தேதி மாவட்டத்திற்குள் நியமனமும், 2ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் நியமன கலந்தாய்வு நடைபெறும். 

சிறந்த பள்ளியாக தேர்வு பெற்றதற்காக பாராட்டு விழா

எஸ்.புதூர் ஒன்றியம், கொண்டபாளையம் நடுநிலைப் பள்ளி, சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு பெற்றதற்காக பாராட்டு விழா நடந்தது.

ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்காமல் இழுத்தடிப்பு

பள்ளி மாணவர், ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவர கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, மதிப்பூதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாக, புகார் எழுந்துள்ளது.

12 ஆயிரம் புதிய ஆசிரியர் பணி நியமனம்: முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமணி

பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம்புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும்  நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச்  செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.

புதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமலர்

பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார். பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை ஆசிரியரில் சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார் என,எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு டெட் தேர்வு வேண்டாம் தேர்வர்கள் வேண்டுகோள் - தினத்தந்தி

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மேல்நிலை பள்ளிகளுக்கு இரண்டுதலைமைஆசிரியர்கள் கட்டாயம்நியமிக்கவேண்டும் பட்டதாரி ஆசிரியர் கழகம்

மேல்நிலை பள்ளிகளுக்கு இரண்டு தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று மதுரையில் நேற்று நடந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரையில் நேற்று உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார்.

Wednesday, August 27, 2014

PFRDA - CPS - Entry Norms, Question & Answer

1. What is the role of PFRDA? 

As per PFRDA Act 2013, PFRDA is an Authority to promote old age income security by establishing, regulating and developing pension funds to protect the interest of subscribers to schemes of pension funds and for matters connected therewith or incidental thereto. 

2. What is National Pension System? 

“National Pension System” (NPS) means the contributory pension system whereby contributions from a subscriber are collected and accumulated in an individual pension account called PRAN using a system of points of presence, a central record keeping agency and pension funds as may be specified by regulations. 

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு

ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு பணி நியமனம் எப்போது?

பணிநிரவல் மூலம் பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. அப்பணியிடங்களை சரிபார்த்து அதற்குரிய அரசாணை மற்றும் சம்பளத்தலைப்புகள் வழங்கும் பணி முழுமையாக நிறைவடையவில்லை.

கலப்புத் திருமணம் செய்வோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற, பதிவு செய்ய வேண்டிய சான்றுகள் என்ன?

கலப்புத் திருமணம் பற்றியும், கலப்புத் திருமணம் செய்வோருக்கான முன்னுரிமைகள் குறித்தும் விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி. கலப்புத் திருமணம் செய்துகொள்ள நிபந்தனைகள் ஏதும் உண்டா?

குழந்தைகளை மனிதனாக வளர்ப்பது பெற்றோர்களின் பொறுப்பு தானே?''

''ஆனால், அது அவர்கள் கட்டுப்பாட்டில் மட்டும் உள்ள விஷயமல்ல! நெருங்கிய நண்பர் ஒருவர் தன் கிராமத்துத் திரு விழாவுக்குக் குடும்பத்துடன் தனி காரில் செல்லும்குதூ கலத்துடன் ஏற்பாடுகளைச் செய்தார். தனக்கும் மனைவிக்கும் ஆறு மாதங்களாக விடுமுறைகள் சேர்த்து, ஊர்க்காரர்களிடம் சொல்லிவைத்து சகலத் துக்கும் ஏற்பாடு செய்துவிட்டார். மூன்று நாட்களுக்கு முன் பையனுக்கு ஸ்கூலில் லீவு சொல்லி இருந்தார்.

20 சதவீதம் மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாது: அதிர்ச்சி தகவல்

விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில், 20 சதவீதம் மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டம் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில், முதல் இடத்தில் இருந்து, மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், 10ம்வகுப்பு தேர்ச்சி சதவீதத்தில் 4ம் இடத்தையே பிடித்தது. பிளஸ் 2வில் 28 ஆண்டுகால சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் கல்வியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அரசு தொடக்கப் பள்ளியில் 3 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள்

கமுதி ஒன்றியம் வெள்ளாங்குளம் அரசு தொடக்கப் பள்ளியில், 3 மாணவர்களுக்கு, 2 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். வெள்ளாங்குளத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஆனால், 5 ம் வகுப்பில் ஒரு மாணவனும், ஒரு மாணவி என இருவரும், 4 ம் வகுப்பில் ஒரு மாணவி என மொத்தம் 3 பேர்களே படிக்கின்றனர்.

பாடம் நடத்தக்கோரி பள்ளியை பெற்றோர் முற்றுகை

மேலூர் அருகே புலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 225 பேர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை அம்பாள்பாய் மற்றும் 11 ஆசிரியர்கள் உள்ளனர்.

வேலை பளுவின் ஊடாக புத்துணர்வு பெற...

ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது, தங்களின் செயல்பாடுகளில் சலிப்பு ஏற்படுவது இயல்பான ஒன்றே. இதுபோன்ற நேரங்களில் ஒரு புதிய புத்துணர்வைப் பெற வேண்டிய தேவை எழுகிறது. ஏனெனில், அதன்மூலமாகவே, நாம் மீண்டும் நமது வேலையில் ஈடுபாட்டுடன், மறுபடியும் இறங்க முடியும்.

முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியராக நியமிக்க கோரிய மனு தள்ளுபடி

இளநிலை, முதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்துள்ளதால், முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியராக நியமிக்க கோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

டி.டி. கல்லூரி மாணவர்களுடன் அரசு நடத்திய ஆறு மணி நேர பேச்சு தோல்வி

மாற்றுக் கல்வி யோசனையை, டி.டி., கல்லூரி மாணவர்கள் ஏற்க மறுத்ததால், அரசு நடத்திய, ஆறு மணி நேர பேச்சு, தோல்வியில் முடிந்தது. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யக் கோரி செப்.1-இல் பேரணி

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ஆர்.செல்லதுரை சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

தமிழ் பண்டிட் மதிப்பெண்ணை வெயிட்டேஜ் கணக்கில் சேர்க்க வேண்டும்

சேரன்மகாதேவி ஆசிரியை ஐகோர்ட்டில் வழக்கு, பள்ளி கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்.தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை, வெயிட்டேஜ் மதிப்பெண் ணில் கணக்கிட கோரிய மனுவில் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

குரூப் 2 தேர்வு முடிவு 15 தினங்களில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி தலைவர் பேட்டி!!

தமிழ்நாடு அரசு தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த டிசம்பர் மாதம் ‘குரூப் 2’ தேர்வை 1064 பேர் எழுதினார்கள். ‘குரூப் 2’ தேர்வு முடிகள் இன்னும் 15 தினங்களில் வெளியிடப்படும்.

TNPSC: 3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும்.

3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் - அரசு பணியாளர் தேர்வு  ஆணையம் அறிவிப்பு. வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் 1,064 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள், 2 வார காலத்திற்குள் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

நாளிதழ் செய்தியால் மாணவர்களை மிரட்டிய உதவி பேராசிரியர்கள்

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் குறித்து, காலைக்கதிர் நாளிதழில் வெளியான செய்தி பொய்யானது என, மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் கையெழுத்திட வேண்டும் என, உதவி பேராசிரியர்கள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க அழைப்பு

பள்ளி அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணசுவாமி மெட்ரிக் பள்ளி சார்பில், பள்ளி அளவிலான, சதுரங்க போட்டி இருபாலருக்கும், ஆகஸ்ட் 30ல் துவங்கி, இரண்டு நாட்களுக்கு நடக்கிறது. அதில், எட்டு, 10, 12, 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.

தொடக்கக் கல்வியில் இந்திய ஒத்துழைப்பை நாடும் வியட்நாம்

தனது தொடக்கக் கல்வியை வலுப்படுத்த, இந்தியாவின் ஒத்துழைப்பை வியட்நாம் கோரியுள்ளது. அந்நாட்டில், CBSE பாடப்புத்தகங்கள் இன்னும் அதிகளவில் பிரபலமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பணி நியமன ஆணை கிடைத்தும் பணியில் சேரமுடியாத தமிழ்வழி தேர்வர்கள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று, பணி நியமன ஆணை கிடைத்தும், தமிழ்வழியில் பயின்ற தனித்தேர்வர் என்ற காரணத்திற்காக, பணியமர்த்தப்படாத பலரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

மாணவர்களை சேர்க்காத 1,937 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்: கல்வித்துறை

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மாணவர்களை சேர்க்காத 1,937 தனியார் பள்ளிகளுக்கு, செப்., முதல் வாரத்தில், நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்குப் பின், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

இயற்பியல், வணிகவியல், பொருளியல் பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியல் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வெளியிட்டது.

இடை நிற்றல் கல்வி தடுத்தல் நிதியை வட்டியோடு வழங்க அரசு ரூ.71 கோடி ஒதுக்கீடு

அரசு பள்ளிகளில் 2013-14ல் பிளஸ் 2 முடித்த ஒவ்வொரு மாணவருக்கும், தலா ரூ.5 ஆயிரம் இடை நிற்றல் கல்வி தடுத்தல் நிதியை வட்டியோடு வழங்க அரசு ரூ.71 கோடி ஒதுக்கியுள்ளது.

TNTET - "SELECT" ஆகாத ஒரு "SENIOR" ஆசிரியரின் மடல்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் select ஆகாத ஆசிரியை. நான் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. இப்போது உள்ள weightage system அறிவித்தபோதே இதனால் பாதிப்பு வரும் என நாம் அறிவோம். நம்முடைய friends circle லில் இதனைப் பற்றி விவாதித்திருப்போம். அப்போதே TET எழுத உள்ள அனைவரும் சேர்ந்து இந்த weightage system வேண்டாம் . யாரும் பாதிக்கப்படாத weightage system பின்பற்ற வேண்டும் என போராட தவறியதின் விளைவு தான் இது. 

TNTET BT ASST: பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவரம்

பள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு 138 கூடுதல் பணியிடங்களுடன் பிறத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை TRB வெளியிட்டது. பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிடம்
விவரம் 
TAMIL -138
ENGLISH - 61
MATHS- 152

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணி: ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக வழக்கு

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கட்-ஆப்‘ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில்குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ் பட்டதாரி ஆசிரியர் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர்பவுசிநேசல் பேகம்(வயது 38). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

இ.பி.எப்., வட்டி இன்று முடிவாகிறது

தொழிலாளர் சேமநல நிதியான, இ.பி.எப்.,க்கான வட்டி வீதம் குறித்து, இன்று முடிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்களின் சேமநல நிதிக்கு, இந்த ஆண்டு (2014 15), 8.7 சதவீத வட்டி வழங்கலாம் என, பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விரைவில் புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உத்தரவு, தகுதியானவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான,முதல்கட்ட நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறக்கியுள்ளது.அதன்படி பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது. தொடர்ச்சியாக புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான கலந்தாய்வு தேதியும் விரைவில் வெளியாக உள்ளது.

PGTRB - PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION (Physics, Commerce and Economics Subject)


Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(Physics, Commerce and Economics Subject)

          

Dated: 25-08-2014

Member Secretary

TET Article: போராட்டத்தின்(வலியின்) பாதை... பணி நியமனம் வேண்டி போராட்டம் செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது தானா?

---”சமூக சமதர்ம நீதி காக்க இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்” என்பது இந்திய அரசியல் சட்டம். எனவே இடஒதுக்கீடு பிரிவினருக்கு உரிய காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைக்கப்பட்ட பின்பு தான் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது. 
--- மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு வைக்கப்பட வேண்டும் என போராடிய பிறகு, அவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. (பின்குறிப்பு - தாள் 1க்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு வைக்கப்பட வேண்டும் என இதுவரை பெரிய அளவில் போராட்டம் ஏதும் நடைபெறவில்லை.

பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிறிய மாற்றம்

கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிலப் பாடங்களில் மட்டும் சிறிய மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சில பாடங்களில் மட்டும் சிறியமாற்றம் ஏற்படுத்தப் பட்டு கடந்த 12 ஆம் தேதி புதியப் பட்டியலை TRB வெளியிட்டுள்ளது. தமிழ் பாடப்பிரிவில் மாற்றம்: தமிழ் பாடத்தில் முதலில் வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலில் 13TE13202227 GEETHA N F BC 6/6/1979 74.99 GW CV என்ற பெண்மணியின் பெயர் 265 வது தர

'பயிற்சி முடித்தும் டி.இ.ஓ., பதவி உயர்வு கிடைக்கலை' : தலைமை ஆசிரியர்கள் விரக்தி

மாநில அளவில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முடிந்தும், டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டி.இ.ஓ.,க்கள், டி.இ.இ.ஓ.,க்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உட்பட 'மாவட்ட கல்வி அலுவலர்' அந்தஸ்தில், மாநில அளவில் 55 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சிறுபான்மை நடத்தும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை???

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா, உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி, பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக கடந்த 14.2.2012 முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஆசிரியர் தகுதி தேர்வில்   தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்திற்காக பதவி நீக்கம் செய்யப்போவதாக நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விமானப் படை பணி எப்படிப்பட்டது?

"ஒரு ராணுவ வீரனாக இருப்பது, தைரியமாக இருப்பதைவிட கூடுதலானது. உங்களைவிட உயர்ந்த ஒன்றுக்காக, உங்களையே தியாகம் செய்வதாகும் அந்தப் பணி" என்ற ஒரு பொன்மொழி உண்டு.

ஆங்கில கேள்விகளுக்கு தேர்வர்கள் பதிலளிக்க தேவையில்லை: யு.பி.எஸ்.சி.

ஆகஸ்ட் 24ம் தேதி நடக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இரண்டாம் தாளில், ஆங்கில கேள்விகளுக்கு தேர்வர்கள் பதிலளிக்க தேவையில்லை என மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவுறுத்தி உள்ளது.

குழந்தைகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துமா அரசு?

உடுமலை, அமராவதி உண்டு உறைவிடப் பள்ளியின் கட்டமைப்பு, குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஆர்.டி.இ. சட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் 89,382 மாணவர்கள் சேர்ப்பு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 89,382 மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 39 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

மதிப்பெண் முறை வேண்டாம்; கிரேடு முறை வேண்டும்

மதிப்பெண் முறை மாணவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. மாணவர்களிடையே அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இதனால், அவர்களுக்கு மனதளவில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பாதிப்பு ஏற்படுகிறது என்றாலே தவறான முறை என்றுதான் பொருள். மாணவர்களின் திறமையைக் கணக்கிட கிரேடு முறையே சிறந்தது. மதிப்பெண் முறை தேவையற்றது.

தேவையில்லாமல் ஏற்படும் பணிநியமன காலதாமதம் ஆசிரியர்களிடையே ஒரு விரக்தி

மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் தவிர அனைத்து பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. மூன்று பாடங்களிலும் மொத்தமாக புதிதாக தேர்வானவர்கள் 49 பேர் மட்டுமே. புதிதாக தேர்வானவர்களுக்கு கடந்த 14 ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பை விழுப்புரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி முடித்தது. அந்த சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 10 நாட்கள் ஆகியும் இதுவரை மூன்று பாடங்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடாமல் இருக்கிறார்கள்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக., 26ல் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொள்கின்றனர். மாவட்டங்களில் அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பாடவாரியாக ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, துறை தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை, அதில் நிலுவையில் உள்ளவை போன்ற பல்வேறு விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. மாவட்ட கல்வித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில்," மாவட்ட வாரியாக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிட எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை விரைவில் அதில் நியமிப்பது குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது,என்றார்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக., 26ல் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆசிரியர் காலிப்பணியிட ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக.,26ல் நடக்கிறது

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக., 26ல் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின் நேர்முக உதவியாளர்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் 2,582 பேர் நியமனம்

தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் 2,582 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மத்திய அரசு அறிமுகப்படுத்திய கட்டாய கல்வி சட்டம் 2009ன்படி 23.08.2010க்கு பிறகு இடைந¤லை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 12 மற்றும் அக்.14ம் தேதியில் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 3 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

கிராமமே நடத்தும் நவீன அரசு தொடக்கப்பள்ளி

உடைந்து போன ஓடுகள், பெயர்ந்து கிடக்கும் தரைகள், பிளந்து நிற்கும் சுவர்கள்..., இப்படித்தான் இன்று பெரும்பாலான அரசு பள்ளிகளை காண முடிகிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஏதாவது ஒரு அரசு பள்ளி மட்டுமே எல்லா வித வசதிகளையும் பெற்று இருக்கின்றது. இதனால் தான் என்னவோ, அரசு பள்ளி என்றாலே பெற்றோர் பலர் பயந்து நடுங்குகிறார்கள்.

பள்ளிக்கல்வி ஆணைகளை புத்தகமாக வெளியிடுக! பெற்றோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் வலியுறுத்தல்

கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் கவனிப்பு போன்றவற்றில் பயிற்சி அளிக்கும் வகையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக, மாவட்டம் தோறும், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாமை அரசே நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Saturday, August 23, 2014

உயிர் (உரிமை) வேண்டும்! வி.ஜி.ஞானவேல்

2013-ஆசிரியர் தகுதித் தேர்வில் 90- மதிப்பெண் மேல் பெற்ற எங்களுக்கு உயிர்(உரிமை) வேண்டும்! தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு எங்களின் பணிவான வேண்டுகோள்.

*ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர் தேர்வினைப்போல் தகுதிதேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.
காரணம்:

Weightage என்பது    +2  மதிப்பெண்ணை = 10 eg(730/1200)=60%x10/100= 6                                                     
B,SC/B.A மதிப்பெண்ணை =15  
B,ED   மதிப்பெண்ணை =15
தகுதிதேர்வு மதிப்பெண்ணை =60
மொத்தம்   =100 என கணக்கிடுவது.

TRB: INSTRUCTIONS TO PAPER I QUALIFIED CANDIDATES WHO ALSO GOT SELECTED FOR THE POST OF B.T. ASSISTANT

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Dated: 23-08-2014

Member Secretary

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு தாள் ஒன்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பணி நாடுகளுக்கான அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர் நியமனம் 2012-13, அறிவிக்கை எண் 06/2014 நாள் 21.08.2014 க்கான தமிழ் நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்ற தகுதியான பணிநாடுநர்களில் பட்டியலில் இருந்து தாள் இரண்டில் தேர்ச்சி பெற்று ஏற்கனவே 10.8.14 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பட்டியலில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநர்களை நீக்குவது என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து இவ்வறிக்கையினை வெளியிடுகிறது.

HSE SEPTEMBER / OCTOBER 2014 – PRIVATE CANDIDATE – HALL TICKET

செப்டம்பர் / அக்டோபர் 2014, மேல்நிலைத் தேர்வெழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 25.08.2014 முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2014-15-ம் ஆண்டில் 500 ஆசிரியப்பயிற்றுநர்களுக்கு பள்ளிக்கு பணிமாறுதல் வழங்குவது சார்ந்து ஒப்புதல் வேண்டி மாநிலத்திட்ட இயக்குநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு" "எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்" என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்திற்கு கிடைத்த முத்தான வெற்றி ஆம் சங்கம் சங்கமித்ததன் விளைவினால் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.மா.இராஜ்குமார்

ஆசிரியர் தகுதித் முதல் தாள் பற்றிய சில விளக்கங்கள்

பழைய காலிப் பணியிடங்கள்

பழைய காலிப்பணியிடங்கள் 845 என அறிவிக்கப் பட்டிருந்தாலும்  OC,BC,MBC பிரிவினருக்கு சிறிது கூட பயனில்லை.SC,STபிரிவினரும் ஒட்டு மொத்த PH பிரிவினரும் பயனடைவார்கள்.

தற்போதைய காலிப் பணியிடங்கள்.

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்!

இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு.

இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-2க்கான 2வது பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளது!

இந்த தாள் ஒன்றுக்கு வெளியிட்டுள்ள நோடிபிகேஷன் தாள் இரண்டுக்கான இரண்டாவது பட்டியலை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு புது தெம்பையும் தெளிவையும் அளித்துள்ளது. தாள் ஒன்றுக்கு வெளியிட்டுள்ள நோடிபிகேஷனில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை பள்ளிகளில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள்; 2582 காலிபணியிடங்களுக்கு 31,500 பேர் போட்டி

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு காலி பணியிடங்கள், தற்சமய காலி பணியிடங்கள், ஆதி திராவிட மற்றும் நலத்துறை பள்ளிகளில் இருக்கும் காலி பணியிடங்கள், சிறுபான்மை மொழி காலி பணியிடங்கள் என்று மொத்தம் 2582 காலி பணியிடங்கள் இந்த அறிவிப்பு மூலம் நிரப்பப்படும். தாள் இரண்டுக்கு வெளியிடப்பட்டதை போல இல்லாமல் ஒரு முழுமையான அளவில் தாள் ஓன்றுக்கான அறிவிப்பு உள்ளது.

12 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பு; பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குகிறார்

ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர், 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர், 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித் துறைக்கு, அனுப்பி உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா, விரைவில், தலைமை செயலகத்தில், பணி நியமன ஆணையை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த போட்டி தேர்வில் இருந்து, 2,000 முது கலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

போதிய பேராசிரியர், அடிப்படை வசதிகள் இன்மையால் கேள்விக்குறியாக மாணவர் கல்வி!

திருத்தணி அரசு கலைக் கல்லுாரியில் உள்ள 70 பணியிடங்களில், 43 இடங்கள் காலியாக உள்ளன. மேலும், அடிப்படை வசதிகளும் இல்லாததால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

நியாயமான போராட்டங்களுக்கு நடவடிக்கை கூடாது: தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி

முறையான நியாயங்களுக்காக போராடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம், என தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி தேசிய பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெயர் மாற்றம் செய்ய மறுத்த அதிகாரியின் உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட் கிளை

திருநங்கையின் பள்ளிக் கல்வி சான்றிதழ்களில், பெயர் மாற்றம் செய்ய மறுத்த, அரசு தேர்வுத்துறை அதிகாரியின் உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. மதுரை ஆண்டாள்புரம், ஸ்வப்னா, மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் ஆணாக பிறந்தேன்.

புதிய பென்ஷன் திட்டத்தின்படி, குடும்ப ஓய்வூதியம் இல்லை

தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர் அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978-க்கு உட்பட்ட அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பயன்கள் தொடர்பான வேலைகளை மட்டுமே தாங்கள் பார்த்து வருவதாகவும் மற்ற திட்டத்தின் (புதிய பென்ஷன் திட்டத்தில்) கீழ் உள்ள ஊழியர்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வரமாட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலப் பாடத்தில் PG மற்றும் TET என இரண்டு இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே நபர்களின் தொகுப்புப் பட்டியல்

சில விண்ணப்பத்தாரர்கள் முதுநிலை ஆசிரியர் இறுதிப் பட்டிலில் இடம்பெற்றிருப்பதோடு TET தேர்வு மூலம் தெரிவு செய்யப் பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் இறுதிப்பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். இந்த வகையில்  ஆங்கிலப் பாடத்தில் மட்டும் இரண்டு இறுதிப் பட்டியலிலும் இடம்பெற்றவர்களின் தொகுப்பு.

கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாத புதிய பென்ஷன் திட்டம்: 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு

புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாததால் தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசுப் பணியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகும், தமிழக அரசுப் பணியில் 2003 ஏப்ரல் 1-க்கு பிறகும் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் (என்.பி.எஸ்.) கீழ் சேர்க்கப்படுகின்றனர்.

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு W.P.NO;33399/2013

ஆனால் கடந்த வாரம் எந்த வழக்கும் வாரந்திர பட்டியலில் இருந்து விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.இந்த வாரம் ( 20-08-2014 ) இன்றோடு 13 வழக்குகள் மட்டுமே வாரப்பட்டியலில் இருந்து விசாரணைக்கு

எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டது .தற்போது 18-08-14 முதல் 22-08-14 வரையிலானவாரப்பட்டியலில் 21 வது வழக்காக இடம் பெற்று
உள்ளது .
HIGH COURT OF JUDICATURE AT MADRAS
WEEKLY CAUSE LIST
(For 18-08-2014 to 22-08-2014 )
COURT NO. 9
HON'BLE MR JUSTICE R.S.RAMANATHAN
TO BE HEARD FROM MONDAY THE 18TH DAY OF AUGUST 2014

TO FRIDAY THE 22AND DAY OF AUGUST 2014

தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் விவரம்

1. ஆரோக்கியமேரி, தலைமை ஆசிரியை, செயின்ட் ஆன்ஸ் ஆரம்ப பள்ளி, ராயபுரம், சென்னை.
2. சம்பங்கி, தலைமை ஆசிரியை, அரசு நடுநிலைப்பள்ளி, கந்தனேரி, வேலூர் மாவட்டம்.
3. கந்தசாமி, தலைமை ஆசிரியர், அரசு நடுநிலைப்பள்ளி, கடப்பை, விழுப்புரம் மாவட்டம்.
4. செல்வராஜு, பட்டதாரி ஆசிரியர், ஆனந்தராஜு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, மரைங்கநாயநல்லூர், நாகை மாவட்டம்.

8 மாதம் ஆகியும் வெளியிடப்படாத டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிந்து 8 மாதங்கள் ஆகியும் முடிவுவெளியிடப்படாததால் அரசு வேலையை எதிர்நோக்கியிருக்கும் 6 லட்சம் பட்டதாரிகள் தவிப்பில் உள்ளனர்.துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, வருவாய் உதவியாளர் உட்பட 19 வகையான பதவிகளில் 1064காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 5.9.2013 அன்று அறிவிப்பு வெளியிட்டது.

104-க்கு இல்லை; 82-க்கு ஆசிரியர் பணியா? தி இந்து ‘உங்கள் குரலில்’ டி.இ.டி. தேர்வாளர்கள் புகார்

கடந்த வாரம் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவில் 104மதிப்பெண் எடுத்த மூத்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை எனவும், 82 மதிப்பெண் எடுத்த புதியவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளதாகவும் தி இந்து ‘உங்கள் குரலில்’ பாதிக்கப்பட்ட தேர்வாளர்கள் புகார் தெரிவித்தனர்.

Wednesday, August 20, 2014

வெயிட்டேஜ் முறை எதிர்ப்பு போராட்டம் யாருக்காக!?

தகுதிதேர்வு என்ற ஒன்று நடந்து முடிந்து கிட்டதட்ட ஓராண்டுகாலம் முடிவடைந்து விட்டது. இந்த தகுதிதேர்வில் கிட்டதட்ட 6லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதினர். அதில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 ம் சேர்த்து 75000 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் பேப்பர் 2 க்கான தேர்வு பட்டியல் சமீபத்தில் வெளியானது. தேர்வு பட்டியல் வெளியானதும் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் யார் பெயரெல்லாம் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லையோ அவர்களில் பலபேர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பலபேர் ஒருங்கினைந்து உண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றனர்.

இருபுறமும் சிக்கித் தவிக்கும் மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள்

மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், நிர்வாக ரீதியான மூவகை கட்டமைப்புக்கும், கவுன்சிலர்களின் உட்கட்சி அரசியலுக்கும், பதில் சொல்ல முடியாமல் தத்தளிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், 1.4.1990 முதல் அரசு ஆசிரியர்களாக அறிவிக்கப்பட்டனர். அப்போது முதல் இவ்வகை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்கள், டி.ஆர்.பி. அல்லது பள்ளிக் கல்வித்துறை மூலமே நிரப்பப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 2,000 மழலையர் பள்ளிகளுக்கு விரைவில் அங்கீகாரம்: தொடக்க கல்வித்துறை

மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 2,000 மழலையர் பள்ளிகளுக்கு, விரைவில் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாரம் தெரிவித்தது. அங்கீகாரம் இல்லாத 1,400 மழலையர் பள்ளிகளை வரும் 2015 ஜனவரிக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி, அங்கீகாரம் இல்லாத மழலையர் பள்ளிகளுக்கு தொடக்க கல்வித்துறை சார்பில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

தனியார் நடத்தும் விடுதிகளிலும் ராகிங் குறித்து ஆய்வு: கவர்னர் ரோசய்யா

தனியார் நடத்தும் விடுதிகளிலும், ராகிங் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என ராகிங் ஒழிப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தில், கவர்னர் ரோசய்யா அறிவுறுத்தியுள்ளார்.

நடப்பாண்டில் மேலும் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் : பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

ஆசிரியர்கள் நியமனத்தில் 5சதவீத மதிப்பெண் விவகாரம்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நோட்டீஸ்

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

12,588 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தகவல்

''நடப்பு ஆண்டில் 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்,'' என பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சபிதா தெரிவித்தார். திண்டுக்கல்லில் ஐந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி தலைமையில் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி முன்னிலை வகித்தார்.

2014-15 - SSA - TENTATIVE CRC TIME TABLE

Primary                            Upper Primary
13.9.14                            13.9.14
11.10.14                          18.10.14
8.11.14                            22.11.14
13.12.14                          06.12.14

பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்க்க தொடக்க கல்வித்துறை அதிரடி உத்தரவு

ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் அந்தந்த ஒன்றியத்தின் உதவி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும்: திண்டுக்கல் மண்டல கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு

கல்வித்துறையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதுமையான திட்டங்களோடு, ஆசியர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வித்தரம் உயரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களின் கல்வி அலுவலர்கள் மற்றும் பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 உத்தேச காலிப்பணியிடங்கள் அடிப்படையில் வெயிட்டேஜ்

ஆசிரியர் தகுதித்தேர்வு - 2013 தாள் 1 குறித்த காலிப்பணியிடங்கள் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் தாள் 1 இறுதி வெயிட்டேஜ் பட்டியல் மற்றும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

7வது ஊதியக்குழு: குறைந்தபட்சம் 26 ஆயிரம் சம்பளம்; மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக  26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்பள கமிஷன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.மாத்தூரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு 25% அகவிலைப்படி உயர்வு; மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகிறது

ஹரியானா மாநில அரசு ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அவர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட இருக்கிறது என்று மாநிலமுதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்திருக்கிறார்.
ஹரியானா மாநில அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் ஒன்றுபட்டு கடந்த பல ஆண்டுகளாகவே தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடி வந்தன. ஹரியானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவிருப்பதை ஒட்டி, மாநில அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா முன்வந்திருக்கிறார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள், பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை; உயர்நீதிமன்றம்

ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ஏற்கனவே இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மேலும் தொடரப்பட்ட புதிய அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக கருதி செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்கு தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

வெயிட்டேஜ்: உண்மையில் பாதிக்கபட்டவர்கள் யார்? 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்களா? டிஇடி யில் பெற்ற மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி பணி அனுபவத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும்!

தகுதிதேர்வு என்ற ஒன்று நடந்து முடிந்து கிட்டதட்ட ஓராண்டுகாலம் முடிவடைந்து விட்டது. இந்த தகுதிதேர்வில் கிட்டதட்ட 6லட்சம் பேருக்கு மேல் தேர்வு எழுதினர். அதில் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 ம் சேர்த்து 75000 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் பேப்பர் 2 க்கான தேர்வு பட்டியல் சமீபத்தில் வெளியானது. தேர்வு பட்டியல் வெளியானதும் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் யார் பெயரெல்லாம் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லையோ அவர்களில் பலபேர் வழக்கு தொடர்ந்தனர்.

பகுதி நேர ஆசிரியர்கள் காலியிடம் கணக்கெடுப்பு

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், கடந்த 2011-ம் ஆண்டு பள்ளிகளில், ஓவியம், தையல், உடற்பயிற்சி பிரிவுகளுக்கு, பகுதி நேர அடிப்படையில் ஆசிரியர்கள், மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் நியமிக்கப்பட்டனர்.

வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு; பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

நேற்று கைதாகி வெளியிடப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெயிட்டேஜ் முறையினை ரத்து செய்து டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்த முயன்றனர்.

பள்ளிகளில் கழிப்பறை அமைக்க டி.சி.எஸ்., நன்கொடை

மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பதவியேற்றுள்ளது. சமீபத்தில், சுதந்திர தின விழாவின்போது உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, 'பள்ளிகளில் மாணவியருக்கென தனி கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். 

டி.இ.ஓ., உத்தரவை மதிக்காததால், பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

டி.இ.ஓ., உத்தரவை மதிக்காததால், பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா உளுந்தாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக சிவானந்தராஜாவும், இளநிலை பட்டதாரி ஆசிரியராக விமலாவும் பணிபுரிந்து வருகின்றனர்.

9ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 26ம் தேதி அடைவு ஆய்வு தேர்வு

அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான அடைவு ஆய்வு தேர்வு வரும் 26ம் தேதி நடைபெறும் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு - 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்க விரும்பும் 10ம் வகுப்பு மாணவர்கள், வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு: பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம் - புதிய தலைமுறை

பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

ஆசிரியர் என்பவர் வேராக இருந்து, மாணவர்கள் மலராய் மலர உறுதுணையாய் இருக்க வேண்டும்.  அறிவை உருவாக்குதல், ஊட்டுதல், அன்பை விதைத்தல், புதுப்பிப்பவர்களாக இருக்க வேண்டும், பாதை போட்டுக் கொண்டே பயணம் செய்ய வேண்டும், பயணம் செய்து கொண்டே பாதை போட வேண்டும். 'வெற்றி என்பது பெற்றுக் கொள்ள, தோல்வி என்பது கற்றுக் கொள்ள' என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.ஆசிரியர்களுக்கு நம்பிக்கை என்பது தேவை. நமக்கு மீறிய சக்திதான் நம் அறிவை தீர்மானிக்கும். தீர்மானிக்கும் இடத்தில் தான் நாம் உதவி செய்ய முயல வேண்டும்.

10 ஆயிரம் பள்ளிகளுக்கு விரைவில் புதிய கட்டணம் : கட்டண நிர்ணய குழு தலைவர் தகவல்

'பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி, விரைவில் துவங்கும்,'' என, கட்டண நிர்ணய  குழு தலைவர், சிங்காரவேலுதெரிவித்தார்.

ஆசிரியர் தகுதிதேர்வில் மதிப்பெண் சலுகை பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள் ( புதுச்சேரி செய்தி ) - தினத்தந்தி

வேலையில்லாத பட்டதாரி ஆசிரியர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:      தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 2012–ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் சலுகை அளிக்கப்படவில்லை. ஆனால் 2013–ம் ஆண்டு நடந்த தேர்வில் மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு கடந்த 2012–ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் மதிப்பெண் சலுகை அளிக்கவேண்டும்.

EXPECTED CUT OFF MARKS FOR PAPER-I

OC - 73.5

BC - 70.1

BCM - 66.5

MBC - 69.5