Pages

Wednesday, August 27, 2014

பாடம் நடத்தக்கோரி பள்ளியை பெற்றோர் முற்றுகை

மேலூர் அருகே புலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 225 பேர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை அம்பாள்பாய் மற்றும் 11 ஆசிரியர்கள் உள்ளனர்.


கடந்தாண்டு பள்ளிக்கு வழங்கப்பட்ட 3 லேப்டாப்களில் ஒன்று காணாமல் போனது. மேலவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆளான கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியையுடன் கருத்து வேறுபாடு கொண்டு, பாடம் நடத்தாமல் இருந்தனர்.

நேற்று கம்ப்யூட்டர் பாடம் நடத்தக்கோரி  பள்ளியை ஒருமணிநேரம் பெற்றோர் முற்றுகையிட்டனர். உதவி தொடக்க கல்வி அலுவலர் சின்னவெள்ளைச்சாமி பாடம் நடத்த ஏற்பாடு செய்வதாக சமரசம் செய்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.