Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, January 30, 2013

    ஆசிரியர் பதவி உயர்வில் மாற்றம் செய்ய கோரிக்கை

    பள்ளிகளில் வரலாறு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வின் போது தற்போது பின்பற்றப்படும் முறையை மாற்றியமைக்க வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையங்களில் ஆயிரக்கணக்கான வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இளங்கலை வரலாறு முடித்து ஆசிரியர் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது 1:3 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது.
    மொத்தமுள்ள வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு பணியிடங்களில் இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறு படித்தவர்களுக்கு ஒரு பணியிடமும், இளங்கலையில் வரலாறு தவிர்த்த மற்ற பாடங்கள் படித்தும் முதுகலையில் மட்டும் வரலாறு படித்தவர்களுக்கு 3 பணியிடமும் ஒதுக்கப்படுகிறது. இதனால் இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறை முதன்மை பாடமாக படித்த ஏராளமான ஆசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர்.
    தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் பழனியப்பன் கூறுகையில், ‘முதுகலை வரலாறு பாடத்திற்கான பதவி உயர்வில் 1:3 என்ற விகிதாச்சார முரண்பாடுள்ள அரசாணை எண் 266ல் மாற்றம் செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
    தற்போதைய ஆண்டு நிலவரப்படி பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதவி உயர்வில் உள்ள இந்த ஏற்றுக்கொள்ள முடியாத முறையை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

    No comments: