Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, January 31, 2013

    அரசு பள்ளியில் மர்ம நபர்கள் புத்தக வினியோகம்: காவல்துறையில் புகார்

    திருப்புவனம் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு புத்தகம் வினியோகம் செய்தவர்களுக்கு, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், காரில் தப்பினர். மாணவர்களிடமிருந்து 650 புத்தகத்தை பறிமுதல் செய்த ஆசிரியர்கள், திருப்புவனம் போலீசில் ஒப்படைத்து புகார் தெரிவித்தனர்.
    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2000 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு நேற்று காலை 8 மணிக்கு பள்ளி முன், கார்களில் வந்த சிலர், மாணவர்களுக்கு "தி கதியோன் இண்டர்நேஷனல்" என்ற வாசகம் அடங்கிய புதிய ஏற்பாடு புத்தகத்தை வினியோகித்தனர்.

    பள்ளி வளாகத்தில் தேர்வுக்காக படித்து கொண்டிருந்த மாணவர்களிடமும் புதிய ஏற்பாடு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே, வைகை மேம்பாலம் அருகே பள்ளி முகப்பில் நின்று, புத்தகங்கள் வழங்கினர்.

    அங்கு வந்த இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசில் புகார் தெரிவித்தனர். இதனை அறிந்த புத்தகங்கள் வழங்கியவர்கள், அங்கிருந்து சென்றனர்.

    தலைமை ஆசிரியர் அப்துல்ரஹீம் தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து 650 புதிய ஏற்பாடு புத்தகங்களை பறிமுதல் செய்து, திருப்புவனம் போலீசில் புகார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரன் விசாரித்து வருகிறார்.

    No comments: