Pages

Thursday, February 16, 2017

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தான்தோன்றிமலை உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஆசிரியர்கள் நேற்று மாலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 


தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின், கரூர் மாவட்ட செயலாளர் ரஞ்சித் தலைமையில், ஆசிரியர்கள் நேற்று மாலை, 5:45 மணிக்கு, தான்தோன்றிமலை உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, அவர்கள் கூறுகையில், ’இடைநிலை ஆசிரியை மஹாராணி என்பவருக்கு, நான்கு மாத ஊதியம் மற்றும் போனஸ் வழங்க வேண்டும்’ என்றனர். உதவி தொடக்க கல்வி அலுவலர் ரமணியின் சமரசத்தில், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.