Pages

Thursday, February 16, 2017

பள்ளி பரிமாற்றுத் திட்டம் மாணவிகள் கலந்துரையாடல்

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருக்கோவிலுார் அடுத்த வடமருதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கான பள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.


விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிறைவு விழாவிற்கு, ஆசிரியைகள் பவானிதேவி, பெரியநாயகி, மகேஸ்வரி, தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இரு பள்ளிகளையும் சேர்ந்த மாணவிகள் தங்கள் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள், பாடம் நடத்தும் முறைகள் குறித்து கலந்துரையாடினர். அதனை தொடர்ந்து மாணவிகளின் அறிவியல் கண்காட்சியும் நடந்தது. இதில் இரு பள்ளிகளையும் சேர்ந்த மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.