Pages

Monday, December 5, 2016

டிஜிட்டல் பண பரிவர்த்தனை : கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மத்திய அரசு அறிவிப்பு

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவித்தால் ஒரு நபருக்கு ரூ.10 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் 10 சிறந்த கலெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும்.மேலும் இத்தகைய நடவடிக்கையை ஊக்குவிக்கும் முதல் 50 பஞ்சாயத்துக்களுக்கும் விருது வழங்கப்படும். 
டிஜிட்டல் பேமெண்ட் சேம்பியன்ஸ் விருது

இச்சேவையில் சிறப்பாக பணிபுரியும் 10 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு டிஜிட்டல் பேமெண்ட் சேம்பியன்ஸ் விருதும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.