தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 451 ஆண் நர்சுகள் உட்பட, 7,243 நர்சுகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, 40,432 பேர் விண்ணப்பித்தனர்.இவர்களுக்கான போட்டித்தேர்வு, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, மற்றும் திருச்சி நகரங்களில், 89 மையங்களில் நேற்று நடந்தது. சென்னையில், அண்ணா பல்கலை, எத்திராஜ் கல்லுாரி உட்பட, 16 இடங்களில் நடைபெற்றது.
விண்ணப்பித்தவர்களில், 2,316 பேர் தவிர, 38,116 பேர் தேர்வு எழுதினர். இதில், 100 மதிப்பெண்களுக்கு, 200 'அப்ஜெக்டிவ்' வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. தேர்வு முடிவுகள், இம்மாத இறுதியில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.