Pages

Wednesday, June 25, 2014

காஸ் விலை உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு: மத்திய அரசு

சமையல் காஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் ரூ.5 உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், காஸ் மற்றும் கெரசின் விலையை உயர்த்த மத்தியஅமைச்சரவை திட்டமிடவில்லை எனவும்,
காஸ் விலை உயர்வு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், அப்போது காஸ் விலை உயர்வை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விலை உயர்வு தொடர்பாக ஆலோசனை தொடர உள்ளதாகவும், காஸ் விலை உயர்வு தொடர்பாக அனைவருடனும் ஆலோசனை நடத்தப்படும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.