Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 3, 2014

    பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணி பறக்கும்படை :ஆசிரியர்கள் நேர்மையாக செயல்படவேண்டும்

    பிளஸ் 2 தேர்வு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும், பறக்கும் படை ஆசிரியர்கள், பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும்,'' என, கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார். சிவகங்கையில், பிளஸ் 2 அரசு பொதுதேர்வு நடத்துவது குறித்த, ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜாராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஷ்வரன் முன்னிலை வகித்தார். 

    கலெக்டர் பேசுகையில், சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 25, தேவகோட்டை கல்வி மாவட்டத்தில், 26 தேர்வு மையங்கள் என, மாவட்ட அளவில் 51 தேர்வு மையங்கள் செயல்படுகின்றன. இதில், சிவகங்கையில் 7166; தேவகோட்டையில் 7,675 மாணவர்கள் என, 14,841 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 
    தேர்வினை கண்காணிக்க, 51 முதன்மை கண்காணிப்பாளர்கள், 51 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வின் போது, ஒழுங்கீன செயல்களில், ஈடுபடுபவர்களை கண்காணிக்க, சிவகங்கை,தேவகோட்டை கல்வி மாவட்டத்திற்கென, பறக்கும் படையில் 65 பேர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அறைகளில், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும். பறக்கும் படையில் இருக்கும் ஆசிரியர்கள் விருப்பு வெருப்பின்றி, நேர்மையான முறையில் பணியாற்றவேண்டும். தேர்வு மையங்களில், "பிட்' அடிக்கும் மாணவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சீனிவாசன், மனோகரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.

    No comments: