Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 3, 2014

    ஆசிரியர்களிடம் பென்ஷனுக்காக பிடித்த ரூ.2 ஆயிரம் கோடி எங்கே : ஆசிரியர் சங்கங்கள் கேள்வி

    "பங்களிப்பு பென்ஷன் திட்டத்திற்காக, ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த, ரூ.2 ஆயிரம் கோடி எங்கே போனதென,'' சிவகங்கையில் நடந்த உண்ணாவிரதத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, பொதுக்குழு உறுப்பினர் பிரடெரிக் எங்கல்ஸ் பேசினார். சிவகங்கையில், ஆசிரியர் உரிமை இயக்கம் சார்பில், உண்ணாவிரதம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமை வகித்தார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மாரிராஜன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொருளாளர் இளங்கோவன், உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக, மாநில பொது செயலாளர் சேதுசெல்வம், நகராட்சி தலைவர் அர்ச்சுனன் முன்னிலை வகித்தனர். 

    * தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரடெரிக் எங்கல்ஸ் பேசுகையில், பங்களிப்பு பென்ஷனுக்காக, ரூ.2 ஆயிரம் கோடியை ஆசிரியர்களிடமிருந்து பிடித்தம் செய்துள்ளனர். இதற்கு தகவல் உரிமை சட்டத்தில் முறையான பதில் இல்லை. மாநில அரசு, ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை, மத்திய அரசுக்கு முறையாக செலுத்தவில்லை. புதிய பென்ஷன் திட்டத்திற்கு பின், 200 ஆசிரியர்கள் இறந்தும்; 40 பேர் ஓய்வும் பெற்றுவிட்டனர். ஆனால், பண பலன் கிடைக்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும் என்றது. ஆனால், லோக்சபா தேர்தல் அறிக்கையில் கூட, இந்த அறிவிப்பு வெளியிடவில்லை. ஆசிரியர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர். இந்நிலை நீடித்தால் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும். 
    பள்ளிகளில் ஆசிரியர்கள் தாக்குப்படுவதை தடுக்க, பாதுகாப்பு விதிமுறை கொண்டுவரவேண்டும். 2004 -06ம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களை, பணி வரன்முறை செய்யவேண்டும், என்றார். 

    1 comment:

    Anonymous said...

    In Swiss bank