தேசிய திறனாய்வுத் தேர்வு தேதி அக்.19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை சி.இ.ஓ., செந்திவேல்முருகன் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: "அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு (என்.டி.இ.,) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், வெற்றி பெறுவோருக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இத்தேர்வுக்கு www.tndge.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
மேலும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் தேதியை அக்.19 வரை நீட்டித்து அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.