"மத்திய அரசு ஊழியர் களுக்கு இணையான சம்பளம் வழங்கக்கோரி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில், 30ம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கரூரில் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் ஜெகதீஸ் தலைமை வகித்தார். செயலாளர் பெரியசாமி, பொருளாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை, இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும், 19ம் தேதி முதல், 24ம் தேதி வரை, தமிழகம் முழுவதும் ஆசிரியர் சந்திப்பு பிரசாரம் நடத்துவது, தொடர்ந்து வரும், 30ம் தேதி கரூரில் மறியல் போராட்டம் என, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.