Pages

Monday, October 14, 2013

தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி தெரிவித்து தீர்மானம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது.


இச்சங்கத்தின் கூட்டம் மாநிலத் தலைவர் மோகன்தாஸ் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். சங்க நிர்வாகிகள் மாயிஸ், பரமசாமி பங்கேற்றனர்.

கூட்டத்தில், தமிழக ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 10 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 comment:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.