Pages

Wednesday, August 21, 2013

அண்ணாமலை பல்கலை.,யில் பி.எட்: நுழைவு தேர்வுக்கு அழைப்பு

அண்ணாமலை பல்கலை.,யில் தபால் வழி பி.எட் படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் நடப்பு ஆண்டில் தபால் வழி பி.எட் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ, எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.காம், எம்.பி.ஏ, மருத்துவ படிப்பு, பட்டய படிப்பு, முதுகலை பட்டய படிப்பு, சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கையும் தற்போது நடந்து வருகிறது.

இந்த படிப்புகள் சம்பந்தமான விபரங்களை அண்ணாமலை பல்கலை., இணையதளம் (http://annamalaiuniversity.ac.in/distance_edu.htm) அல்லது கல்வி மையங்களை அணுகவும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.