Pages

Friday, June 28, 2013

பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணி வழங்கக் கோரிக்கை

பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் மாநில பொதுச்செயலர் பெனின் தேவகுமார் தமிழக கல்வி அமைச்சரை நேரில் சந்தித்து அளித்துள்ள மனு விவரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கே உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கும், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கும் பட்டதாரி ஆசிரியர் பணியில் பணிவரன் முறை செய்யப்பட்ட நாளை மட்டுமே கணக்கில் எடுத்து பதவி உயர்வு வழங்க வேண்டும். பிற பாடங்களுக்கு 7 பாடவேளை இருப்பதுபோல், சமூக அறிவியல் பாடத்துக்கும் 7 பாடவேளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.