Pages

Friday, June 28, 2013

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம் அறிவிப்பு

"மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்குதல் உட்பட ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில், செப்.,25 ல், மறியல் நடத்தப்படும்" என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் ஜோசப்சேவியர் தெரிவித்தார்.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. பொருளாளர் ஜோசப் சேவியர் கூறியதாவது: 6வது சம்பள குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு, ரூ.8,550 என, குறைவான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பல போராட்டங்கள் நடத்தியும், அரசு கண்டு கொள்ளவில்லை.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும். தொகுப்பூதிய ஆசிரியர்களை, பணிவரன் முறை செய்யவேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 25ல் சென்னையில் போராட்டம் நடத்தப்படும், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.