தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மே 28) தொடங்குகிறது.
மே 28-ம் தேதி காலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும். பிற்பகலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்.
மே 29-ம் தேதி காலை தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வும், பிற்பகலில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் நடைபெறும். மே 30-ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வும், பிற்பகலில் இடைநிலை ஆசிரியர் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுவதற்கான கலந்தாய்வும் நடைபெறும்.
மே 31-ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும் என தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே 31-ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும் என தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.