பிளஸ் 2 இயற்பியல் தேர்வில், மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய, வினா எண், 62ற்கு, முழு மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொது தேர்வில், இயற்பியல் தேர்வு மார்ச், 11ம் தேதி நடந்தது. கேள்விகள் சற்று குழப்பமாக இருந்ததால், மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் இயற்பியல் தேர்வில், பகுதி 3ல், 12 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அதில், 7 வினாக்களுக்கு விடை தர வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும், 5 மதிப்பெண்.
இதில், 62வது வினாவில் (தமிழ் வழியில்) ரேடானின் தத்துவம் யாது? அதன் பயன்பாடுகள் யாவை? என, எழுத்து பிழையுடன் இருந்தது. ரேடாரின் தத்துவம் யாது, அதன் பயன்பாடு யாவை என, கேட்டிருக்க வேண்டும். இது மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த வினாவிற்கு முழு பதில் எழுதியிருந்தாலும் சரி, வரிசை எண், 62 என, எழுதியிருந்தால் கூட, முழு மதிப்பெண் வழங்க கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
இதில், 62வது வினாவில் (தமிழ் வழியில்) ரேடானின் தத்துவம் யாது? அதன் பயன்பாடுகள் யாவை? என, எழுத்து பிழையுடன் இருந்தது. ரேடாரின் தத்துவம் யாது, அதன் பயன்பாடு யாவை என, கேட்டிருக்க வேண்டும். இது மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த வினாவிற்கு முழு பதில் எழுதியிருந்தாலும் சரி, வரிசை எண், 62 என, எழுதியிருந்தால் கூட, முழு மதிப்பெண் வழங்க கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.