இலங்கை தமிழர்களுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டம் எதிரொலியாக, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மதுரை அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
மாணவர் போராட்டத்தால் மதுரை உட்பட ஆறு மாவட்டங்களில், 53 அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகள் மூடப்பட்டன. மாதிரி மற்றும் மறு தேர்வுகளும், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டன. இதனால், மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில், நேற்று நடக்க இருந்த பட்டமளிப்பு விழாவும், ரத்து செய்யப்பட்டது.
மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் விஜயராணி கூறுகையில், "அரசு அறிவுறுத்தலின்படி, மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது&'&' என்றார்.
மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் விஜயராணி கூறுகையில், "அரசு அறிவுறுத்தலின்படி, மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது&'&' என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.