Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 25, 2013

    வருடாந்திர சரிபார்ப்பிற்காக குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்ச் சான்றிதழை அனுப்ப வேண்டும்: மாநகராட்சி

    சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வூதியம் மற்றும்  குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர சரிபார்ப்புக்காக தங்களது உயிர்ச் சான்றிதழை மார்ச் 1-ம் தேதி முதல் கணக்கு அலுவலர் (ஓய்வூதியம்)
    அலுவலகத்தில்  பதிவு செய்ய வேண்டும்.இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்ப்பில்:

    சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் வருடாந்திர சரிபார்ப்புக்காக தங்களது உயிர்ச் சான்றிதழை கணக்கு அலுவலர் (ஓய்வூதியம்) அலுவலகத்தில் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் ஜூம் மாதம் 30-ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நேரில் சென்று ஓய்வூதிய கொடுப்பாணை புத்தகத்துடன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.அல்லது குடும்ப ஓய்வூதிய கொடுப்பாணை புத்தகத்துடன் நேரில் வர இயலாதவர்கள் அரசு பதிவு பெற்ற அலுவலர்களின் சான்றொப்பமிட்ட உயிர்ச் சான்றிதழை அரசு பதிவு பெற்ற மருத்துவர அலுவலரின் மருத்துவ சான்றுடன் ஓய்வூதிய, குடும்ப ஓய்வூதிய கொடுப்பாணை புத்தகத்தின் நகல்களுடன் இணைத்து அஞ்சல் மூலமாக அனுப்பலாம்.

    பின்னர் கண்டிப்பாக நேரில் வந்து உயிர்ச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு உயிர்ச் சான்றிகழை நேரிலோ அஞ்சல் மூலமோ அனுப்பாதவர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்குவது ஆகஸ்ச் 2013 முதல் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    No comments: