Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, January 5, 2013

    ஆசிரியர்கள் கண்டிப்பு : தேர்வெழுத மாணவர்கள் மறுப்பு

    பாகனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு வகுப்பிற்கு ஒத்துழைக்காத பிளஸ் 2 மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்ததால், தேர்வு எழுத மறுத்து,முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் செய்தனர்.

    இப்பள்ளியின் பிளஸ் 2 அறிவியல் பிரிவில், 13 மாணவர்கள், 13 மாணவிகள் படிக்கின்றனர். கூடுதல் மார்க் எடுக்க வைக்கும் நோக்கில், அந்தந்த பாட ஆசிரியர்கள் காலை,மாலையில் தலா ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது அரையாண்டு தேர்வையொட்டி சிறப்பு வகுப்பு நடக்கிறது.
    இயற்பியல் தேர்வுக்கான மாலை நேர சிறப்பு வகுப்பை 13 மாணவர்கள் புறக்கணித்தனர்.நேற்று காலை தேர்வு எழுத வந்தபோது,அவர்களை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கண்டித்தனர். இதையடுத்து,மாணவர் சங்கத்தினர் உதவியோடு 12 மாணவர்கள்,தேர்வெழுத ஆசிரியர்கள் அனுமதி மறுப்பதாக கூறி, முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணனிடம் புகார் அளித்தனர். இவர்களை சமாதானப்படுத்திய சி.இ.ஓ.,12 பேரையும் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி, தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார்.
    தலைமை ஆசிரியர் கூறுகையில், "அதிக மார்க் பெற வைக்க சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு ஒத்துழைக்காமல் தேர்வெழுத வந்த 13 பேரை நேற்று கண்டித்தோம். சிறிது நேரம் கழித்து எழுத அனுமதிக்கலாம் என்றபோது, ஒருவர் தவிர, 12 பேர் சி.இ.ஓ.,வை சந்தித்திருக்கின்றனர். அவரது உத்தரவுப்படி 12 பேருக்கும் இயற்பியல் தேர்வு நடத்தப்படும். தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது எவ்வித காழ்ப்புணர்ச்சியும் இல்லை,&'&' என்றார்.

    No comments: