Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, January 11, 2013

    தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி - 01.01.2013ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் / உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் குறித்து விவரம் கோரி உத்தரவு.

    1 comment:

    Anonymous said...

    50:30:20:10 என்ற விகிதத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பதவியை நிரப்பலாம் என்று சங்கங்கள் கையெழுத்து போட்டதால் இப்பொழுது எல்லா உதவி இயக்குனர்கள் மற்றும் இயக்குனர் நேரடியாக மாவட்டக் கல்வி அலுவலராக சேர்ந்து இன்று மாநில இயக்குனரகத்தில் அவர்களே முழுவதும் பதவிகளில் உள்ளனர். மேல் நிலை மற்றும் உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் வாய்ப்புகளை இழந்து தலைமை ஆசிரியர்களாகவே ஓய்வு பெறும் சூழ் நிலையில் உள்ளனர். இல்லாவிட்டால் இவர்கள்தான் இப்போது இயக்குனராகவும் உதவி இயக்குனர்களாகவும் இருக்க வேண்டியவர்கள். நேரடியாகச் சேர்ந்தவர்கள் சிறிய வயதினராக இருப்பதினால் அவர்கள் ஓய்வு பெறுவதற்குள் தலைமையாசிரியர்கள் ஓய்வு பெற்று விடுகிறார்கள். சங்கங்கள் கையெழுத்து போடும்போது இதனை யோசிக்கவில்லை என்பது துரதிர்ஸ்டம்தான். பீ ஜீ டீச்சர்களாக சேர்ந்தவர்கள் எம் ஜி யார் ஆட்சிக் காலத்தில் சேர்ந்தவர்கள் என்பதால் தி மு க ஆட்சியின் போது இந்த டைரக்ட் போஸ்ட்டிங்க் முறையை திட்டமிட்டே கொண்டுவந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அப்போது தலைமை அலுவலகத்திலும் சங்கத்திலும் என்ன சூழ்நிலை என நீங்கள் விரிவாக எழுதுங்களேன்.....ப்ளஸ் டூ அறிமுகமான போது ஆசிரியராகச்சேர்ந்து தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்ற துரதிர்ஸ்டசாலி.
    இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி நேரடியாக சேர்க்கப்பட்ட டீ ஈ ஓ க்கள் ட்ரைனிங்க் என்ற பெயரில் மேல் நிலைப் பள்ளிகளில் பயிற்சி எடுத்துக் கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களாகவோ அல்லது வேறு பணியில் இல்லாதவர்களாகவோ இருந்தனர். சிலர் வேறு துறைகளில் பணியாற்றியவர்களாகவும் இருந்தார்கள். இவ்வாறு அனுபவம் இல்லாதவர்களுக்கு பயிற்சி கொடுத்து பின் அவர்களை வேலைக்கு அமர்த்துவதை விட ஏற்கனவே பத்து வருடம் மேல் நிலை ஆசிரியர்களாகவும் பின் தலைமை ஆசிரியர்களாக இன்னுமொரு பத்து வருடம் இருந்த அனுபவம் வாய்ந்தவர்களை டீ ஈ ஓ க்கள் ஆக்கியிருக்கலாம். எம் ஜீ ஆர் காலத்தில் பணியில் சேர்ந்தவர்கள் தி மு க காலத்தில் பலி வாங்கப்பட்டார்கள் என்றால் இப்போது தி மு க காலத்தில் பணியில் சேர்ந்த சாலை பணியாளர்களை அதிமுக பலி வாங்கிவிட்டது. இவர்களின் செஸ் விளையாட்டில் மாட்டிக் கொண்ட காயின்களாய் மாட்டிக் கொண்டது அரசு ஊழியர்கள்தான்.
    copy at WWW.CRSTTP.BLOGSPOT.COM