பிளஸ் 2 பொதுத்தேர்வு ஆண்டுதோறும் மார்ச் முதல் வாரத்தில் துவங்கும். கடந்த ஆண்டு 8ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை தேர்வுகள் நடந்தது. இந்தாண்டு பொதுத் தேர்வுகள் தொடங்குவது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி கூறியது, அரசு பொதுத் தேர்வுகளுக்கான
அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தேர்வு நடத்தப்படும் தேதியை விரைவில் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு முதல் தேர்வுகளின் சான்றிதழ்கள் புகைப்படத்துடன் வழங்கப்படுகிறது. பள்ளிகள் மூலம் விண்ணப்பித்த மனுக்கள் அரசு தேர்வுத்துறைக்கு வந்துள்ளன. அவற்றில் உள்ள திருத்தங்கள் செய்வதற்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சி.டி. வடிவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தேர்வு இயக்குனர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.