Pages

Wednesday, October 31, 2012

நீலம் புயல் : கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று மதியம் விடுமுறையும், சென்னை விமானம் நிலையம், துறைமுகம் இன்று பிற்பகல் மூடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உடனடியாக வீடு திரும்ப தமிழக அரசு அறிவுறுத்தல். கடற்கரை, வேளச்சேரி பறக்கும் இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை பொதுமக்கள் புயல் மற்றும் கனமழை சார்பான அவசர உதவிக்கு 1913 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நீலம் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னை விமான நிலையம் இன்று பிற்பகல் மூடப்படுகிறது. சென்னைக்கு வரவுள்ள விமானங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு, மதுரை மற்றும் ஐதராபாத்திற்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக  தகவல்கள் தெர்விக்கின்றன. கடற்கரை, வேளச்சேரி பறக்கும் இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.