Pages

Sunday, June 10, 2012

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒய்வூதியதரர்களுக்கான அடுத்த அகவிலைப்படி உயர்வு 6 முதல் 7 சதவீதமாக உயர்த்தலாம்!

கடந்த ஏப்ரல் 2012 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண்  அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக 4 புள்ளிகள் அதிகரித்து செங்குத்தாக சென்றது. அதேபோல் பெட்ரோல் பொருட்களின் விலை ஏற்றதால் அடுத்த மாதமும் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதரர்களுக்கான  அகவிலைப்படி 6% முதல் 7% ஆக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2012 முதல் உயர்த்தக்கூடும். அதேபோல் மத்திய அரசு அறிவித்த ஓரிரு வாரங்களில் தமிழக அரசும் உயர்த்தும். பெட்ரோல், அத்தியாவாசி பொருட்கள் தொடர்ந்து விலைவாசி உயர்வால் சிக்கி தவிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வால் சற்று நிவாரணம் கிடைக்கும் என்பதால் அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.