பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயருகிறது. புதன்கிழமை இன்று
கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் அரசு இந்த விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு புதன்கிழமை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோலியத்
துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நேற்று செவ்வாய்க்கிழமை இது குறித்து
சூசகமாகச் சொல்லியுள்ளார். மேலும், விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என்றும்
கூறியுள்ளார். ஆனால், என்றிலிருந்து இந்த விலை ஏற்றம் இருக்கும் என்பதை
அவர் கூறவில்லை. இதனிடையே இன்று முதல் விலை உயர்வு என்று அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2010ல் தனது கட்டுப்பாட்டில் இருந்து பெட்ரோல் விலை நிர்ணயிப்பதை அரசு விடுவித்த பிறகு பல முறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.