கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த
மாணவர்களுக்கு உறுதியாக "லேப்டாப்" வழங்கப்படும், என, முதன்மை கல்வி
அலுவலர்கள் கூட்டத்தில் அரசு உத்தரவாதம் வழங்கியுள்ளது.
கடந்த
சட்டசபை தேர்தலின்போது, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில்
படிக்கும் பிளஸ் 2 மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கு அரசு இலவசமாக "லேப்டாப்"
வழங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநில அளவில், கடந்த ஆண்டு (2011)
பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பெயர்
பட்டியல் எடுக்கப்பட்டது.
அவர்களுக்கு மாவட்ட வாரியாக இலவசமாக "லேப்
டாப்" வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், "லேப் டாப்" தயாரிக்கும் பணியில்
ஏற்பட்ட தொய்வால், பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்னும் வழங்கவில்லை.
இதற்கிடையில், இந்த கல்வி ஆண்டில்(2011-2012) மாநில அளவில் 8 லட்சத்து 23
ஆயிரத்து 208 மாணவர்கள் பிளஸ் 2 அரசு பொது தேர்வு எழுதினர்.
இவர்களில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில்
படித்த மாணவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகம் மூலம்
சேகரிக்கப்பட்டது. அவர்கள் தற்போது, தேர்வு முடிந்து பள்ளியை விட்டுசென்று
விட்டதால், தங்களுக்கு அரசு அறிவித்தபடி இலவச "லேப்டாப்" கிடைக்குமா என்ற
சந்தேகம் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது:
கடந்த வாரம் சென்னையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசின் இலவச
திட்டங்கள் குறித்த அறிக்கை சேகரிப்பு கூட்டம் நடந்தது. அப்போது இந்த தகவல்
அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அக்கூட்டத்தில், கடந்த கல்வி
ஆண்டு பிளஸ் 2 முடித்து சென்ற மாணவர்களுக்கு "லேப்டாப்" கட்டாயம் உண்டு, என
அரசு உறுதி வழங்கியுள்ளது. இதற்காக, இன்று (மே 30) முதல் பள்ளிகளில் பிளஸ்
2 மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அதன் பின்புறம், "லேப் டாப்பிற்கு"
தகுதி பெற்ற மாணவர் என "சீல்" அடித்து தரப்படும். "லேப்டாப்" வந்தவுடன்
மாணவர்களுக்கு அறிவித்து வழங்கப்பட்ட பின், மதிப்பெண் பட்டியல் பின்புறம்
"வழங்கப்பட்டது" என எழுதப்படும், என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.