Pages

Thursday, May 24, 2012

பிளஸ் 2 உடனடித் தேர்வுகள் துவக்கம் - அரசு தேதி அறிவிப்பு.

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான உடனடித்தேர்வு, ஜூன் 22ல் துவங்கி, ஜூலை 4ம் தேதி வரை நடக்கிறது. ஒரு லட்சம் பேர், இத்தேர்வை எழுதுகின்றனர்.
ஏழு லட்சத்து 56 ஆயிரத்து 464 மாணவர்கள் தேர்வெழுதியதில், 86.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 6 லட்சத்து 55 ஆயிரத்து 594 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒரு லட்சத்து 870 பேர் தோல்வி அடைந்தனர்.

உடனடித் தேர்வில், மூன்று பாடங்கள் வரை தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என, ஏற்கனவே இருந்த விதிமுறையை மாற்றி, அனைத்துப் பாடங்களிலும் தோல்வி அடைந்தவர்கள், உடனடித் தேர்வில் பங்கேற்கலாம் என, முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.