Pages

Monday, April 16, 2012

விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் புதிய முடிவு.


பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளில், அரசு பள்ளி மாணவர்களின் விடைத்தாள்களை, அந்தந்த அரசு பள்ளி ஆசிரியர்களே திருத்தம் செய்ய வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வுகள், சமச்சீர் கல்வி அடிப்படையில் நடந்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகளில், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுவர். கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இருக்காது.
எனவே, மெட்ரிக் மாணவர்களின் விடைத்தாள்களை, மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும், அரசு பள்ளி மாணவர்களின் விடைத்தாள்களை, அரசு பள்ளி ஆசிரியர்களும் திருத்த வேண்டும் என, அந்ததந்த விடைத்தாள் முகாம் அலுவலர்களை அறிவுறுத்த, அனைத்து பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.